• Apr 20 2024

திருமணமான 2 மாதங்களில் ரவீந்தர் செய்த விஷயம்..பிரபலங்கள் பலரும் வாழ்த்து..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருபவர் தான் ரவீந்தர். இவர் இறுதியாக பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் நடிகர் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். 

இந்நிலையில் இவர் அண்மையில் சீரியல் நடிகை மகாலக்ஷ்மியைத் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து மனைவியுடன் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருவார். அவை இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் முக்கியமாகும்.



இந்நிலையில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது ஒரு புது சொகுசு காரை ரவீந்தர் - மஹாலக்ஷ்மி ஜோடி வாங்கி இருக்கிறார்கள்.

"வாழ்க்க முழுக்க நாம நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்டி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா... அது பெரிய அதிர்ஷ்டம். அப்டி நமக்கு கிடச்ச பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடச்சா... New wife, new life,new car..drive easy and be crazy" என ரவீந்தர் கார் உடன் எடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். எனினும் தற்போது அவர்களுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.




Advertisement

Advertisement

Advertisement