• Apr 20 2024

என்ன மேடம் அதுக்குள்ள அடுத்த ஆண்டுக்கு ரெடி ஆகிட்டிங்களா?- மகாலட்சுமியின் புகைப்படத்தால் அசந்து போன ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

அன்பே வா' சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வரும் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால், திருப்பதியில் மிகவும் எளிமையாக இவர்கள் திருணம் நடந்தது. இவர்களின் திருமண புகைப்படம் வெளியான போது கூட, பலர் இது படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா? என சந்தேக கேள்விகளை எழுப்பி இருந்தனர்.


ஆனால் தாங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாக பல பேட்டிகளில் கூறி வந்தனர்.திருமணம் ஆனதில் இருந்து, த படு குஷியாக இருக்கும் இந்த ஜோடி, அவ்வபோது மிகவும் ரொமான்டிக் புகைப்படங்கள் சில வற்றையும் வெளியிட்டு, தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகின்றனர்.


அந்த வகையில் தற்பொழுது மகாலட்சுமி அடுத்த ஆண்டு வரவுள்ள நாட்காட்டியில் தமது ஜோடிப்புகைப்படம் பதிக்கப்பட்டுள்ளதாக சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். இதனால் அடுத்த ஆண்டுக்கு இப்பவே ரெடி ஆகிட்டீங்களா மகாலட்சுமி என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement