• Apr 20 2024

வீட்டுக்கு வந்த கதிர்-முல்லை செய்த விசயம்..அதிர்ச்யில் உறைந்த மீனா-வெளியானது வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு சகோதரர்களின் ஒற்றுமை எடுத்துக் காட்டுவதால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த சீரியலை பார்த்து பல குடும்பங்கள் சேர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.இவ்வாறுஇருக்கையில் இந்த சீரியலில் பலருக்கும் பிடித்த ஜோடி தான் கதிர்-முல்லை.

இவர்கள் இருவரும் தற்போது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.அதாவது தமது குழந்தைக்காக வேண்டிய கடனை அடைத்து விட்டே குடும்பத்திற்குள் நுழைவதாக சபதம் போட்டுள்ளார்கள்.இந்நிலையில் இருவரும் மதுரையில் நடக்கும் சமையல் போட்டியில் கலந்து கொண்ட போது சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது.அந்த தருணம் முல்லை போன் பண்ணி நடந்த விடயத்தை கூற அண்ணன்கள் இருவரும் உடனே வந்து காப்பாத்தி விடுகிறார்கள்.

இந்நிலையில் இன்று ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் மூர்த்தி கதிரிடம் நீ வீட்டுக்கு வா என்று கூற கதிரும் ஓம் என்று கூறி வீட்டிற்கு செல்கின்றார்.அப்போது தனம் இருவருக்கும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் கூட்டிச் செல்ல கதிர் பழையதை நினைத்து பார்த்து விட்டு நாங்கள் போட்டியல் ஜெயித்த பணம் என்று கூறி விட்டு 10லட்சத்தை தனத்திடம் கொடுக்க மீனா என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைகின்றார்.இவ்வாறு இருக்கையில் இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement

Advertisement