• Apr 20 2024

செவ்வந்தி சீரியலில் இருந்து விலகிய நடிகர் மனோ... காரணம் என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பல புதுமையான கதையுடன் இருப்பதால் ஏகப்பட்ட ரசிகர்கள் திரைப்படங்களை போன்று இத்தனையும் விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் சன் டிவியில் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “செவ்வந்தி” சீரியல். 

இந்த சீரியலின் உடைய கதாநாயகியாக திவ்யா ஸ்ரீதர் நடித்து வருவதோடு சமீபத்தில் நடிகர் அர்னவ் உடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல சர்ச்சைகள் வெளி வண்ணம் இருக்கிறது. இதே சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிகர் ராகவ் நடித்து வந்தார். 


இந்நிலையில் தற்போது ராகவ் சீரியலை விட்டு விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் அவர் சீரியலை விட்டு விலகவில்லை எனவும், அவர் கதாபாத்திரம் சீரியலில் லாரி விபத்தில் இறப்பது போல காட்டப்பட்டு இருந்தது.

ஹீரோ இறந்துவிட்டால் சீரியலில் எப்படி எல்லாம் கதை கொண்டு செல்லப்படும் என ரசிகர்கள் சந்தேகத்துடன் இருந்து வந்த நிலையில், இனி நடிகர் நித்தின் தான் ஹீரோவாக செவ்வந்தி சீரியலில் நடிப்பார் எனவும், திவ்யாவும் நித்தின் திருமணம் செய்து கொண்டு அதற்கு பின் தான் சீரியலின் உடைய உண்மையான கதை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கதையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகவ் இந்த சீரியலை விட்டு விலக நினைத்ததால் தான் இப்படி கதையை முடித்ததாகவும் கூறப்படுகின்றது. இதுதொடர்பாக ராகவ் கூறுகையில் "செவ்வந்தி சீரியலில் இருந்து வெளியில் போகின்றேன், சீரியல் குழுவினர் கொடுத்த நினைவுகளுக்கு நன்றி, ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி" எனக் கூறி இருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement