• Apr 26 2024

மருத்துவமனையில் உள்ள வி.ஏ.துரை.. வீட்டை எழுதி வாங்கிய விஜயகாந்த்.. வெளியாகிய பரபரப்புத் தகவல்.. பின்னணி என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவிலும், அரசியலிலும் பல வருடங்களாக கொடி கட்டிப் பறந்து வந்த கேப்டன் விஜயகாந்த் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் சமீபகாலமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். விஜயகாந்த் சுகதேகியாக இருக்கும் போதும் சரி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பின்னரும் சரி ரசிகர்கள் உட்படப் பலரும் அவர் செய்த  நல்ல விடயங்கள் குறித்துத்தான் பேசியுள்ளார்கள்.


இவ்வாறு சிறந்த குணவியல்புகளைக் கொண்ட விஜயகாந்த் ஒரு படத்திற்காக தயாரிப்பாளரின் வீட்டை எழுதி வாங்கி இடுக்கின்றார். அதாவது அது வேறு யாருமில்லை சமீபகாலமாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற வி.ஏ.துரை தான். 


இவர் தான் விஜயகாந்த் நடித்த கஜேந்திரா என்ற படத்தையும் தயாரித்துள்ளார். இப்படம் ரிலீஸ் ஆகி தோல்வி அடைந்தது. இதனால் இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு கடும் நஷ்டமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜயகாந்துக்கு பேசிய சம்பளத்தை இவரால் கொடுக்க முடியவில்லை.


இதனையடுத்து விஜயகாந்த் சம்பளத்துக்கு பதிலா உன் வீட்டை எழுதிக் கொடுன்னு சொல்லி வாங்கிவிட்டாராம். இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் கடந்திருப்பினும் தற்போது வி.ஏ.துரை சிறுநீரக பிரச்சினையால் சிகிச்சை பெற்று வருவதால் இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement