• Apr 19 2024

பிரமாண்டமாக நாளை நடைபெறவுள்ள 'வாரிசு' ஆடியோ லான்ச்... வராமல் நழுவிய சிம்பு.. பின்னணி என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'வாரிசு' திரப்படமானது பொங்கலுக்கு ரிலீஸாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ளார். வாரிசு படத்துடன் இணைந்து அஜித்தின் துணிவு படமும் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. 


இந்நிலையில் அஜித் வழக்கம் போல துணிவு படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொள்ள மாட்டேன் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார். ஆனால், பொங்கல் ரேஸில் கெத்து காட்ட வேண்டும் என முடிவெடுத்துள்ள விஜய், வாரிசு ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தற்போது ரெடியாகி வருகிறார். 

அந்தவகையில் நாளை மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு ஆடியோ லான்ச் பிரமாண்டமாக நடைபெறுவதாக படக்குழு அறிவித்துவிட்டது. மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்குப் பிறகு விஜய் இதுவரை எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. 


அதாவது பீஸ்ட் படத்திற்குக் கூட ஆடியோ வெளியீடு நடைபெறாமல், சன் டிவியில் நெல்சனுடன் இணைந்து பேட்டி மட்டுமே கொடுத்தார் விஜய். இதனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு வாரிசு ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

அதேநேரம் இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில் இந்நிகழ்ச்சியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிம்பு பங்கேற்கமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, இப்போது வெளிநாட்டில் ஓய்வில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் சிம்பு கலந்துகொள்ள மாட்டார் என சொல்லப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement