• Apr 25 2024

அட இப்படி ஆகிடிச்சே... கண்ணாடியை வெறுப்புடன் பார்த்த விக்ரமன்... நடந்தது என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 ஆனது ஆரம்பமாகி 3ஆவது வாரத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கின்றது. இந்நிலையில் தற்போது வீட்டில் 18 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.


அந்தவகையில் நேற்றைய எபிசோடில் வந்ததுமே ஆயிஷாவிடம் மடக்கி மடக்கி பல கேள்விகளை கேட்டு அவரை நிகழ்ச்சி முடியும் வரை கதறவிட்டார் நம்ம ஆண்டவர். இதனைத் தொடர்ந்து இந்த வீட்டில் நோகாமல் நுங்கு சாப்பிடுவது யார்? என கமல் ஒரு கேள்வியை கேட்க, அதற்கு விக்ரமன் உடனே "மைனா தான் அனைவர் இடத்திலும் ஜாலியாக பேசியே ஸ்கோர் பண்ணிவிடலாம் என்று பார்க்கிறார். பொம்மை டாஸ்க் அவர் சிறப்பாக செயல்படவில்லை" என கூறி இருந்தார்.


விக்ரமன் இவ்வாறு கூறியதைக் கேட்டதும் கோபத்தின் உச்சியில் இருந்த மைனா, கமல் போகும் வரை பொறுமையாக காத்திருந்துவிட்டு விக்ரமனிடம் சண்டை போடத் தொடங்கினார். அதாவது "நான் இந்த வீட்டில் எல்லா வேலைகளையும் நன்றாக செய்கிறேன், சமைக்கிறேன், வீட்டை சுத்தம் செய்கிறேன்" எனக் கூறியிருந்தார்.

மேலும் "பொம்மை டாஸ்கில் நான் விளையாடதற்கு காரணம் ஆரம்பத்திலேயே நான் அவுட்டாகி விட்டதால், எனக்கு விளையாட ஆர்வம் வரவில்லை. இதற்காக நான் நோகாமல் நுங்கு சாப்பிடுகிறேனு சொல்லுவீங்களா? அப்போது எதுக்கு மற்ற நேரத்தில் என்னுடன் ஏன் பேசுறிங்க, இனிமேல் என் கூட பேசாதீங்க" என விக்ரமனின் முகத்தில் அடித்தது போல சடாரென்று பேசினார் மைனா. 


இதற்கு கோபப்படாத விக்ரமன் உடனே "பர்சனலா உங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும் மைனா, ஆனால், நான் கேமை பற்றித்தான் பேசினேன், அதை நீங்க புரிச்சுக்கல" என்றார். ஆனால்,மைனா கொஞ்சம் கூட சமாதானமே ஆகாமல், இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் என்று அதிரடியாக கூறிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து விக்ரமன் பாத்ரூமில் போய் "நாம என்னடா பண்ணோம், கேமைத்தானே விளையாடினோம்" என்பது போல கண்ணாடியை வெறுப்புடன் பார்த்துக்கொண்டே நின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விக்ரமனை பார்க்க பாவமாக இருக்கின்றது எனக் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement