• Apr 20 2024

விஜய்க்கும் தந்தைக்கும் இடையில் முற்றிய சண்டை..? படிக்கட்டில் இழுத்துச் சென்ற எஸ்.ஏ.சி.. நடந்தது என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையில் சமீபகாலமாக இடம்பெற்று வருகின்ற ஒரு சில கருது வேறுபாடுகளின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். அதாவது விஜய் தனது பெற்றோரை விட்டு நீங்கி மனைவி, மகன், மகள் என தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.


இவ்வாறு பத்து மாதம் சுமந்து பெற்ற மகன் தங்களை புறக்கணிப்பதை நெருங்கிய நண்பர்களிடம் கூறி கண்ணீர்விட்டு வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இயக்குநர் ஷங்கர் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதாவது அதில் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் விஜய்க்கு இடையே நடைபெற்ற சண்டை ஒன்று குறித்து பேசியுள்ளார். அதாவது "எஸ்ஏ சந்திரசேகரிடம் நான் உதவியாளராக இருந்த போது அவரின் வீட்டிலேயே அலுவலகம் இருந்தது. விஜய் அப்போது சின்ன பையன் என கூறியுள்ளார். 


மேலும் "ஒரு நாள் அவர்களின் வீட்டில் பயங்கர சத்தமாக இருந்துள்ளது. அப்பாவும் மகனும் மாறி மாறி கத்திக்கொண்டார்கள். பின்பு திடீரென விஜய்யை படிக்கட்டில் இருந்து இழுத்து சென்றாராம் எஸ்ஏ சந்திரசேகர். இதனை பார்த்த மற்ற உதவி இயக்குநர்களும் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே பயங்கர சண்டை நடப்பதாக பார்த்து அதிர்ச்சி அடைந்தார்களாம். பின்னர் உதவி இயக்குநர்களிடம் சென்ற எஸ்ஏ சந்திரசேகரிடம், அவர்கள் என்ன சார் பிரச்சனை என கேட்டுள்ளார்கள்.

அதற்கு எஸ்.ஏ.சி ஊசி போட வர மறுத்து விஜய் அடம்பிடித்ததால் அவரை இழுத்து சென்று காரில் அமர வைத்ததாக தெரிவித்தாராம். இப்படி தான் விஜய்யை இயக்குநர் ஷங்கருக்கு தெரியவந்ததக கூறியுள்ளார். அத்தோடு விஜய் சிறு பிள்ளையாக இருக்கும் போது அவருக்கு ஷங்கர் நடிப்பு சொல்லிக் கொடுத்திருக்கின்றார். 


ஆனால் பின்னாளில் விஜய் இவ்வளவு பெரிய நடிகர் ஆவார் என தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியிருக்கிறார் ஷங்கர். விஜய்யும், எஸ்.ஏ.சந்திரசேகரும் பிரிந்திருக்கின்ற இந்த நேரத்தில் ஷங்கரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement