• Apr 20 2024

ஏடிகேவிற்கு காதல் கடிதம் எழுதிய மைனா நந்தினி-ஹவுஸ்மேட்ஸிற்கு அசீம் கொடுத்த ஷாக்- நடந்தது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி அப்படியே 74 நாட்களை கடந்து தள்ளுங்க பாஸ் தள்ளுங்க என இந்த சீசனை கடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த வாரம் கமல்ஹாசன் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கலந்து கொள்ள உள்ள நிலையில், நாளையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் 74ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம் வாங்க. அதாவது எல்லோரும் பள்ளிக் கூட டாஸ்க்கினை முடித்து விட்டு காலேஜ் டாஸ்க்கிற்கு வந்துள்ளனர். இதில் ஒவ்வொருத்தரும் அதே கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.


அதன்படி எல்லோரும் சூப்பராக பண்ணிட்டு இருந்தாங்க.குறிப்பாக மைனா நந்தினி ஏடிகேவிற்கு காதல் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு இன்டர்வியூ எடுக்க சொன்னாங்க அதன்படி ஷிவின் தனலக்ஷ்மியை இன்டர்வியூ எடுத்தார்.வெளியே போனால் சந்தோஷப்படுவீங்களா என தனாவை பார்த்து ஷிவின் கேட்டார்.

அதற்கு கடைசி வரைக்கும் நான் நானாக தான் இருந்தேன். அதனால் வெளியே போனாலும் நான் நல்லா தான் இருப்பேன். என்னை நினைத்து நிச்சயம் பெருமைப்படுவேன் என தனலட்சுமி வழக்கம் போலவே தாறுமாறாக பதில் அளித்துள்ளார்.தொடர்ந்து ஏடிகே அசீமிடம் இந்த வீட்டில நீங்க நீங்களாவே இருக்கிறீங்களா என்று கேட்டார்.


அதற்கு அசீம் இங்கே பலபேர் அவங்களாக இருப்பது போல நடித்து வருகின்றனர். யாருமே அவங்களா இல்லை என சொன்னார். தொடர்ந்து மைனா நந்தினியை ஏன் இப்படி இருக்கிறீங்க உங்களை மாற்றிக் கொள்ளமாட்டீர்களா என்று கேட்ட போது இது தான் என்னுடைய இயல்பு என்று மைனா நந்தினி விளக்கம் கொடுத்திருந்தார்.

இவ்வாறாக காலேஜ் டாஸ்க்கைத் தொடர்ந்து நடந்த கேள்வி கேட்கும் டாஸ்க்கோடு அந்த எப்பிஷோட் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement