• Mar 29 2024

என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்- வனிதாவிடம் நேரடியாகவே கேட்ட ராபர்ட் மாஸ்டர்- என்ன சொன்னார் தெரியுமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜயகுமார் - மஞ்சுளா நட்சத்திர தம்பதியின் மூத்த மகளான வனிதா விஜயகுமார், ஏற்கனவே இரண்டு முறை, திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில். மூன்றாவதாக கடந்த 2020 ஆம் ஆண்டு, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, இவர்கள் இருவருக்கும் வனிதாவின் வீட்டில், கிறிஸ்தவ முறைப்படி மிகவும் எளிமையான முறையில், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் பைபிள் போதித்து, மோதிரம் மாற்றி திருமணம் செய்து வைத்தார். வெள்ளை நிற கவுண் அணிந்த வனிதாவை அவரது இரு மகள்கள் தான் பெண் தோழிகளாய் மாறி அழைத்து வந்தனர். 


இவர்களின் திருமணம் முடிந்த ஓரிரு நாட்களிலேயே,பீட்டர் பாலின் குடிப்பழக்கத்தையும், புகை பழக்கத்தையும் கண்டு பீதியாகி, அவரை விட்டுப் பிரிந்தார்.இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பீட்டர் பால் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், பீட்டர் பால் தன்னுடைய கணவர் இல்லை என்றும் அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இப்படியான நிலையில் வனிதா தன்னுடைய இரண்டாவது கணவரும் டான்ஸ் மாஸ்டருமாகிய ராபர்ட் மாஸ்டருடன் அண்மையில் ஓர் பேட்டியில் கலந்து கொண்டார்.அப்போது ராபர்ட்  வனிதாவிடம் நீ என்னைப் பற்றி என்னை நினைக்கிறாய் என்று கேட்டார். அதற்கு பதில் கூறிய வனிதா நீ ஒரு சுவீஸ்ட் பேர்சன் என என நண்பர்களுக்கு சொல்லி இருக்கிறேன்.நான் பெருமையா சொல்லக் கூடிய விஷயம் என்றால் எப்போதும் சின்சியராக வேர்க் பண்றது தான் என்றும் சொன்னார்.


தொடர்ந்து பேசிய வனிதா எந்த உறவாக இருந்தாலும் ஏதும் பிரச்சினை என்றால் இருந்து பேசிடுங்க எல்லாமே சரி ஆகிடும். எங்க வீட்டுக்காரங்களுக்கும் சொல்லுறது இது தான் முதலில் பிரச்சினையை உட்கார்ந்து பேசுங்க எல்லாமே சரி ஆகிடும் இருக்கிற கொஞ்ச டைம்லையாவது வாழ்க்கையை சந்தோஷமாக வாழனும் என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement