• Mar 29 2024

மனசு வலிக்குது... எங்களால சாப்பிடக் கூட முடியல... கை எடுத்துக் கும்பிட்டு கதறி அழும் அமுதவாணன் அம்மா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது மற்ற சீசன்களை விட அதிகளவில் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றது. இதற்கான முக்கிய காரணமே அங்குள்ள போட்டியாளர்கள் தான். 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியானது தற்போது களை கட்டி வருகின்றது.

அவ்வாறான முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் தான் அமுதவாணன். ஆரம்பத்தில் ரசிகர்களிடம் அதிக ஆதரவை சந்தித்த இவருக்கு தற்போது வெறுப்புக்களே அதிகமாகி வருகின்றன. இதற்கான முக்கிய காரணம் அவர் ஜனனியுடன் நெருங்கி பழகியமை பற்றி பலரும் தவறாக கூறியிருந்தமை தான்.


டர்ந்து அமுதவாணனின் அம்மா சமீபத்தில் தனது மகன் பற்றி ஒரு பேட்டியினை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் "அமுதவாணன் ரொம்பவே டிசிப்பிளீனான ஆள், 15 வருஷமாக அவன் இந்த பீல்ட்டில் இருக்கான் ஆனால் இதுவரைக்குமே யார் கிட்டேயும் கெட்ட பெயர் வாங்கினது இல்லை, ரொம்பவே டிசிப்பிளீனாக இருந்த பையனை தப்பாகப் பேசினால் அவன் எப்படி ஏத்துக்குவான், அந்த மன உளைச்சல் தான் அவனைப் பாதிக்குது


அவன் ஏதாவது சாதாரணமாக பிக்பாஸ் வீட்டில் பேசினால் கூடி அதை தப்பாக வெளிய போட்டிடுறாங்க, ஜனனியை அவர் தன்னோட அக்கா பொண்ணு மாதிரி தான் பாக்கிறாரு, அவளும் ஒரு குட்டிப் பொண்ணுங்களை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும், ஆனால் அதை வெளிய மற்றவங்க தப்பாக கதை கட்டி விடுறாங்க.

வீட்டில எங்களால சாப்பிடக் கூடி முடியல, ஏன் இவ்வளவு தப்புத் தப்பாக பேசுறாங்க, அது எங்களை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை மற்றவங்க நினைக்க மாட்டாங்களா?, சும்மா தப்பாக ஒரு விஷயத்தைப் போடாதீங்க, அது எங்க குடும்பத்தை பாதிக்குது, இதை நான் உங்க எல்லார் கிட்டேயும் கை எடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன்


அவரைப் பற்றிப் பெருமையாக நீங்க போடாட்டிலும் பரவாய் இல்லை, தயவு செய்து தப்பாக போடாதீங்க, ரொம்பக் கஷ்டமாக இருக்கு, ரொம்பவே மனசு வலிக்குது, தப்புப் பண்ணாத ஒருத்தரைப் பற்றித் தப்பாக பேசாதீங்க. அவர் கொரோனா டைம் இல் கூட நிறைய பேருக்கு உதவி பண்ணி இருக்கார்.

அவன் தற்கொலை பண்ணிக்கலாம் என்று இருந்த நேரத்தில கிடைத்த ஒரு சான்ஸ் தான் பிக்பாஸ். எவ்வளவோ கனவோட உள்ள போன அவனுக்கு இப்படி ஒரு கெட்ட பெயர் வருதே என்று கவலையாய் இருக்கு. அவன் தோற்றாலும் வரும்போது நல்ல பெயரோடு வரணும்" எனக் கூறி கண்ணீர் விட்டு அழுத்திருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement