• Apr 24 2024

இலங்கையிலும் மாஸாக ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம்- செம கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'வாரிசு' திரைப்படம்  இன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது. வாரிசு திரைப்படத்தை இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். 


இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்துள்ளனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.


மேலும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த நிலையில் வாரிசு திரைப்படம் இலங்கையிலும் சூப்பராக ஓடி வருவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தளபதி ரசிகர்களே அதிகமாக இருப்பதால் திரையரங்கும் எங்கும் ரசிகர்கள் குவிந்து வருகின்றார்கள்.அத்தோடு பாசிடிவ் விமர்சனங்களை குவித்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement