• Apr 20 2024

புது வருசத்துல குட் நியூஸ் சொன்ன விஜே அர்ச்சனா..இதை யாரும் எதிர்பார்க்கலையே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல், பல ரசிகர்களின் பேராதரவுடன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது.

மேலும் இதில் சிவகாமியின் மருமகள் அர்ச்சனா எனும் கதாபாத்திரத்தில், அதாவது செந்திலின் மனைவி கதாபாத்திரத்தில் விஜே அர்ச்சனா நடித்து வந்திருந்தார். தனக்கே உரிய முக பாவனைகள், உடல் மொழி மற்றும் தனித்துவமான வசன உச்சரிப்பால் பல ரசிகர்களை சம்பாதித்தார்.அத்தோடு  பன்முகத் திறமைகள் கொண்ட அர்ச்சனா பின்னர் இந்த சீரியலில் இருந்து விலக, அவரை பலரும் மிஸ் பண்ணினர்.


இதனிடையே அண்மையில் வெளியான புதிய ஒரு நிமிட ஆல்பம் பாடலில் மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கலாக டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்தார் அர்ச்சனா. அத்தோடு தம்மா துண்டு என்கிற தலைப்பில் உருவான அந்த ஆல்பம் பாடலை ரதன் குமார் இசையமைத்து அர்ச்சனாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

இவ்வாறுஇருக்கையில் புத்தாண்டில் நல்ல விஷயம் சொன்ன விஜே அர்ச்சனா தற்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் நடித்து வருவதாகவும், இதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும்  தெரிவித்திருக்கிறார். 


இயக்குநர் அஜய் ஞானமுத்து 2015-ல் வெளியான டிமான்ட்டி காலனி என்கிற ஹாரர்-த்ரில்லர் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத்திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.எனினும்  இதனை அடுத்து நயன்தாரா நடிப்பில், இமைக்கா நொடிகள், விக்ரம் நடிப்பில் கோப்ரா ஆகிய படங்களை இயக்கிய இவர், தற்போது அருள்நிதி நடிப்பில் டிமான்ட்டி காலனி 2-ஆம் பாகத்தை இயக்கி வருகிறார்.

Advertisement

Advertisement

Advertisement