• Apr 24 2024

பிக்பாஸ் வீட்டுக்குள் குயின்ஸியிடம் காதல் கதையை கூறிய விக்ரமன்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கையில் விக்ரமன் தனது காதல் கதையை சக போட்டியாளர் குயின்ஸியிடம் காதல் கதையை பகிர்ந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கதை சொல்லும் நேரம் என்ற பகுதியின் போது விக்ரமன் தனது காதலை சொல்ல முற்படும் போது அவரை தடுத்து நிறுத்தி விட்டனர்.எனினும்  தற்போது அந்த காதல் கதையை கூறுமாறு குயின்ஸி விடுத்த வேண்டுகோளை ஏற்று தனது காதல் கதையை விக்ரமன்  சொல்லியுள்ளார்.

அதாவது கல்லூரி படிக்கும் காலங்களில் தான் தன்னுடைய காதலியை பார்த்ததாகவும் தனது நண்பனின் உறவினர் தான் தனது காதலி என்று தெரிவித்த விக்ரமன், நாங்கள் முதலில் நட்பாக பழக ஆரம்பித்தோம் என்றும், அதன் பின்னர்  அந்த நட்பு காதலாக மாறியது என்றும் தினமும் தனது காதலி கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடன் பிக்கப் செய்து கொண்டு வெளியே சுற்றுவோம் என்றும் கூறியிருந்தார்.

மேலும் ஒருகட்டத்தில் இரு குடும்பத்திலும் பேசி திருமணம் செய்து கொள்ளலாமென்று நினைத்தபோது தனக்கு சரியான வேலை இல்லை, தனது குடும்பமும் இன்னும் செட்டிலாகவில்லை என்பதால், தன்னால் அவருடைய வாழ்க்கை வீணாக கூடாதென்று முடிவு செய்து அவரை பிரிந்து விட்டதாக சொன்னார்.

எனினும் தற்போது நாங்கள் பிரிந்து விட்டோம் என்றாலும் என் காதலி ஒரு தேவதை என்று விக்ரமன் தனது காதல் கதையை குயின்ஸியிடம் கூறியுள்ளார். விக்ரமனின் பின்னணியில் இப்படி ஒரு காதல் கதையா? என நெட்டிசன்கள் இந்த கதையை கேட்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement