• Apr 19 2024

நான் விரும்பினால் மட்டும் தான் வெளியே போவேன்... ஷிவினிடம் கூறிய விக்ரமன்.. அப்போ மக்களோட தீர்ப்பு... வெளியானது வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவான ரசிகர்களை கொள்ளை கொண்ட நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது தற்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் கடந்த அக்டோபர் 9ம் தேதி இந்நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் நன்றாக விளையாடக் கூடியவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இருந்த காரணங்களினால் வெளியேறிவிட்டார்கள். 


அதாவது ராபர்ட் மாஸ்டரைக் கூறலாம். அத்தோடு கடந்த வாரம் குயின்ஸி வீட்டைவிட்டு வெளியேறி இருந்தார். இவ்வாறுஇருக்கையில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு 6 பேர் கமிட்டாகியுள்ளார்கள். அசீம், ஜனனி, கதிரவன், ADK, ஆயிஷா மற்றும் ராம் ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாக இதில் யார் வெளியேறுவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ ஆனது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது இரவு நேரத்தில் விக்ரமனும், ஷிவினும் ஒரு இடத்தில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.


அதில் விக்ரமன் "நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்" எனக் கூறுகின்றார். அதற்கு ஷிவின் நீங்களாக போனால் எனக்கு வருத்தம் இருக்காது நானாக அனுப்பணும்" எனக் கூறுகின்றார். 

அதற்கு விக்ரமன் "அது கனவிலும் நடக்காது" எனக் கூறுகின்றார். உடனே அவ்வளவு தைரியமா என ஷிவின் கேட்கின்றார். எனக்கு என் மீது விட அறத்தின் மீது நம்பிக்கை இருக்கின்றது என விக்ரமன் கூறுகின்றார். அதனால் நானாக விரும்பினால் தான் வெளிய போக முடியும் எனக் கூறுகிறார் விக்ரமன்.

அதற்கு ஷிவின் "மக்கள் விரும்பணும்" என்று கூறுகின்றார். உடனே விக்ரமன் அறம் தான் மக்கள் எனக்கூறி சமாளிக்கின்றார். இது குறித்த வீடியோ ஆனது தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement