• Apr 20 2024

மகேஷ்வரியை ராஃக்கெட் பண்ணும் விக்ரமன்- ஜனனி கொடுத்த அதிர்ச்சி- 26ம் நாளில் நடந்தது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. அந்த வகையில் 26ம் நாள் என்ன நடந்தது என்று பார்ப்போம. அதாவது இந்த வாரம் அந்த டிவி இந்த டிவி என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பங்குபற்றி வருகின்றனர். இந்த நிலையில் விக்ரம் டீமுக்கு சரியான புள்ளி வழங்கவில்லை என்று அசீம் கூறியதால் மகேஷ்வரியும் மைனாவும் அசீமுடன் சண்டை போடுகின்றனர். இதனைத் தொடர்ந்து குயின்சியின் டவலை ஜனனி எடுத்ததாகக் கூறியதால் ஜனனிக்கும் குயின்சிக்கும் வாக்குவாதம் ஏற்படுகின்றது.


இதில் ஜனனி கடுப்பாகி கஃப்பை கீழே போட்டு உடைக்கின்றார். இவர்களுக்கிடையில் தனலக்ஷ்மியும் ஜனனிக்காக குயின்சிகிட்ட பேசுகின்றார். இதனைத் தொடர்ந்து அடுத்தநாள் காலை பாடலுடன் ஹேவுஸ்மேட்ஸ் எழும்புகின்றனர். பின்னர் அமுதவாணன் ராமை சும்மா கலாய்க்கின்றார். தொடர்ந்து மைனாவும் மகேஷ்வரியும இந்த வாரம் அசீம் போய்டுவான் நிம்மதியாக இருக்கலாம் என்று பேசிக் கொண்டு  இருக்கின்றனர்.

அதே போல ரச்சிதா சிவப்பு நிற புடைவை கட்டியிருப்பதைப் பார்த்து ராபேட் மாஸ்டர் வழிந்து கொண்டு இருந்தார். தொடர்ந்து சீரியல் டாஸ்க் என்ற ஒன்று நடந்தது. இதில் அமுதவாணன் டீம் சூப்பராக செய்தது. இதனால் அந்த டீம்  10 புள்ளிகளையும் மைனா டீம் 5 புள்ளிகளையும் பெற்றது. தொடர்ந்து அந்த டிவி அதிக புள்ளிகளைப் பெற்று வெற்றியடைந்தது.


இதனால் அந்தடிவியின் தலைவரான அமுதவாணன்  அடுத்த வாரத் தலைவர் போட்டிக்கு நேரடியாகத் தேர்வாகினார். இவரைத் தொடர்ந்து இந்த டாஸ்கில் சிறப்பாக பங்குபற்றியதால் மைனாவும் ராபேட் மாஸ்டரும் கூட தலைவர் போட்டிக்கு தேர்வாகினார்கள். அதே போல இந்த டாஸ்கில் பங்கு கொள்ளாதவனாக அனைவரும் ராமைத் தேர்ந்தெடுத்தனர்.

அத்தோடு இந்த வாரம் முழுவதும் சரியாக செயற்படாதவர்களாக விக்ரமனைத் தேர்ந்தெடுத்தனர். இந்த தேர்வின் போது மகேஷ்வரிக்கும் விக்ரமனுக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ராமும் விக்ரமனும் ஜெயிலுக்குள் செல்ல வேண்டும் என பிக்பாஸ் அறிவித்தார்.

தொடர்ந்து மழை அடித்துப் பெய்து கொண்டிருக்கும் வேளையில் ரச்சிதா அந்த மழையில் போய் படுத்துக் கொண்டு விளையாடிட்டு இருக்கும் போது ராபேட் மாஸ்டர் ரச்சிதாவை அழைக்கின்றார். ஆனால் அவர் வராமல் மழையிலேயே விளையாடிக் கொண்டிருந்தார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைந்தது.

Advertisement

Advertisement

Advertisement