• Apr 20 2024

கையில் செயினைக் கொடுத்த மணிகண்டன்... திடீரெனக் கட்டியணைத்த விக்ரமன்.. வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சேனல்களில் ஒன்றாகிய விஜய் டிவியில் 80 நாட்களைக் கடந்து பிக்பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அந்தவகையில் அமுதவாணன், விக்ரமன், அசீம், ஏடிகே, ரச்சிதா, மைனா நந்தினி, சிவின், கதிர், மணிகண்டன் என ஒன்பது போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் ஒரு செயினை போட்டியாளர்களின் கையில் கொடுத்து "இந்த செயினை விட இந்த உறவு தான் முக்கியம்" என நீங்கள் நினைப்பவர்கள் யார் எனக் கேட்கின்றார். அதற்கு மணிகண்டன் விக்ரமனையும், ஏடிகே மணிகண்டனையும் கூறுகின்றார்கள். அதுமட்டுமல்லாது மணிகண்டன் விக்ரமனின் கையில் செயினைக் கொடுத்ததும் மணிகண்டனும் , விக்ரமனும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து கொள்கின்றனர். 

அதேபோல் விக்ரமன் கதிரைக் கூறுகின்றார். அத்தோடு மைனா ஷிவினைக் கூறுகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. 

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement