• Mar 29 2024

முக்கிய தினத்தில் வெளியாகும் 'துருவ நட்சத்திரம்' படம்... அறிவிப்பை வெளியிட்ட கௌதம் மேனன்... படு குஷியில் விக்ரம் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் கௌதம் மேனன். ஸ்டைலிஷ் இயக்குநர் என ரசிகர்களால் சிறப்பாக அழைக்கப்படும் இவரினன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. 


இப்படத்தில் கதாநாயகனாக சியான் விக்ரம் நடித்திருக்கின்றார். மேலும் அவரோடு இணைந்து ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்யதர்ஷினி, ராதிகா, சிம்ரன் என மிகப்பெரிய திரையுலக நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளமை இப்படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்திருக்கின்றது.

இப்படத்தினுடைய படப்பிடிப்புகள் யாவும் கடந்த 2018-ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக முடங்கியது. குறிப்பாக சுமார் 4 ஆண்டுகளாக வெளியாகாமல் முடங்கிக் கிடந்த இப்படம் சமீபத்தில் மீண்டும் உயிர்பெற்றது.


அதாவது சியான் விக்ரம் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து துருவ நட்சத்திரம் படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளதாக இயக்குநர் கௌதம் மேனன் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். 

அதுமட்டுமல்லாது இப்படத்தினுடைய ரிலீஸ் அப்டேட்டையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இப்படம் குறித்து பேசிய கௌதம் மேனன் "நடிகர் விக்ரம் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் பட ரிலீஸ் வேலைகளில் தற்போது பிஸியாக இருப்பதாகவும், அந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆன உடன் துருவ நட்சத்திரம் படத்தின் எஞ்சியுள்ள பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்" எனக் கூறினார். 


அதுமட்டுமின்றி இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே இந்த ஆண்டு விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது 'துருவ நட்சத்திரம்' படமும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளது.

இவ்வாறாக விக்ரம் நடிப்பில் உருவான 3 படங்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ளமை விக்ரம் ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. அதுமட்டுமல்லாது 'துருவ நட்சத்திரம்' படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான ஒரு பெரிய தினத்தில் இப்படம் வெளியாக இருக்கின்றமையால் இப்படம் குறித்த எதிர்பார்ப்புக்கள் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement