• Apr 20 2024

தனது அடுத்த படத்திலும் கோப்ரா பட இயக்குநருடன் கை கோர்க்க முடிவு செய்த விக்ரம்- பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சியான் விக்ரம் . இதைத்தொடர்ந்து சேது,தூள்,ஜெமினி,சாமி போன்ற படங்களில் தத்ரூபமாக தன் நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார் .

அதன் பின்பு சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமான தயாரிப்பில் வெளிவந்த அந்நியன் திரைப்படத்தின் மூலம் மக்களின் விருப்பத்துக்குரிய நடிகராக திரையுலகில் தனக்கென இடத்தை பிடித்தார். தற்பொழுது இவரது நடிப்பில் கோப்ரா என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.

மேலும் இமைக்கா நொடிகள்,போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் தான் இயக்குநர் அஜய் ஞானமுத்து .இவர் தான் கோப்ரா படத்தையும் இயக்கி வருகின்றார். இப்படத்தில் விக்ரமிற்கு கதாநாயகியாக ஸ்ரீ நிதி ஷெட்டி நடித்துள்ளார். இப்படம் மே 26 இல் வெளியாகவுள்ளது

இந்நிலையில் சியான் விக்ரம் தன்னுடைய அடுத்த படத்தையும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் கொடுத்துள்ளார் . அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள முதல் படம்தான் கோப்ரா, இப்படம் வெளியாகும் முன்னரே விக்ரம், இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ,

இதனால் கோப்ரா படத்தை எப்படி இயக்கியிருப்பார் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement