• Apr 20 2024

விஜய்யின் ஆஸ்தான இயக்குநருக்கு கிடைத்த அதிஷ்டம்- தளபதி சொன்ன ஒற்றை வார்த்தை - இதெல்லவா பெரிய மனசு

stella / 10 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில்  இரு பெரும் நட்சத்திரத் துருவங்களாக வலம் வருபவர்கள் தான் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்கென்றும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.அந்த அளவுக்கு விஜய் அஜித் அவர்களின் வளர்ச்சி சினிமாவையே பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இருவருமே ஒன்றாக சினிமாவிற்குள் நுழைந்தவர்கள். சமமான வெற்றி தோல்விகளை பார்த்தவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஒன்றாக நடித்திருக்கின்றனர். அதன் பிறகு நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றதும் தனித்தனியாக தங்களுடைய திறமையை காட்ட ஆரம்பித்து விட்டனர்.


இன்றைய சூழ்நிலையில் இவர்களுக்குள் போட்டிகள் பொறாமைகள் மனதளவில் இல்லாவிட்டாலும் தொழில் முனையில் ஒரு போட்டி இருந்து கொண்டே வருகின்றன. இந்த நிலையில் இயக்குநர் பேரரசு ஒரு சமயம் ஏவிஎம் ஸ்டுடியோவில் நின்று கொண்டிருந்தாராம். சரவணன் பேரரசுவிடம் ” நாங்கள் அஜித்தை வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறோம். அதை நீங்கள் இயக்குகிறீர்களா?” என கேட்டதும் பேரரசுவிற்கு அதிர்ச்சியாகி விட்டதாம்.

வாய்ப்புக்காக அலைந்த பேரரசுவிற்கு தானாக இந்த வாய்ப்பு அமைந்ததும் பேரரசுவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லையாம். உடனே கையில் பத்து லட்சத்தை கொடுத்து நீங்கள் தான் இந்த படத்தில் இயக்குநர் என ஏவிஎம் சரவணன் சொல்லி இருக்கிறார்.அதுவரை பேரரசுவை விஜய்யின் ஆஸ்தான இயக்குநர் என்றே அழைத்துக் கொண்டு இருந்தனர். அதனால் பேரரசு நேராக விஜய் இடம் போய் “அஜித்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு வந்திருக்கிறது. என்ன சொல்வது என்று தெரியவில்லை” என கேட்டாராம்.


உடனே விஜய் “இதில் என்ன யோசிக்க இருக்கிறது .உடனே கிளம்புங்கள். நல்ல ஒரு வாய்ப்பு. நல்ல ஒரு நிறுவனம். போய் அந்த படத்தை இயக்கும் வேலையை பாருங்கள்” என சொன்னாராம் விஜய்.  அந்தப் படம் தான் திருப்பதி திரைப்படம். இந்த தகவலை பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement