• Apr 19 2024

முதல்ல அப்பாவுக்கு விருந்து வைங்க விஜய்.. திடீரென பரபரப்பு கருத்தை வெளியிட்ட இயக்குநர் !

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரசிக மன்ற நிர்வாகிகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் விஜய் பனையூரில் பிரியாணி விருந்து வைத்தது ரசிகர்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் ஒரே பேச்சு பொருளாக அமைந்தது.மேலும்  இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி நடிகர் விஜய்க்கு வைத்த கோரிக்கை சமூகவலைத்தளத்தில்  புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது

நடிகர் விஜய்க்கும் அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனை வெடித்த நிலையில், இருவரும் நீண்ட நாட்களாக பேசிக் கொள்வதில்லை என தகவல்கள் தீயாய் பரவி வந்தன.இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரும் சில சினிமா விழாக்களில் தனது மகன் பற்றி பேசியது எல்லாம் பெரிய பிரச்சனையை கிளப்பியது. அத்தோடு  இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோரும் விஜய் தனது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரனை மதித்து பார்த்துக் கொள்ள வேண்டுமென தெரிவித்திருந்தனர்.

அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரின் பிறந்தநாள் விழாவில் கூட நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் இருவருமே கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகின. அத்தோடு, யூடியூப் சேனல்களிலும் மகனுடன் ஆன பிரச்சனை குறித்தும் மனவருத்தம் குறித்தும் எஸ்.ஏ. சந்திரசேகர் வெளிப்படுத்தியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அத்தோடு  வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், தியேட்டர்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவி வருவதாக சொல்லப்படுகின்றது. இவ்வாறுஇருக்கையில், திடீரென தனது ரசிக மன்ற நிர்வாகிகளை வரவழைத்து பிரியாணி விருந்து போட்டிருந்தார் நடிகர் விஜய்.மேலும்  அந்த கூட்டத்திற்கு பின்னர் அரசியல் அறிவிப்பு தொடர்பாக விஜய் எதுவும் அறிக்கை வெளியிடாத நிலையில், அந்த கூட்டம் வாரிசு பட ரிலீஸ் சம்மந்தமாகவே நடைபெற்றதா? என்கிற கேள்விகள் கிளம்பின.

திடீரென நடிகர் விஜய் இப்படியொரு விருந்து வைத்திருக்கிறாரே என தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாதத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி, கஸ்தூரி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது இயக்குநர் பிரவீன் காந்தி பேசிய பேச்சு தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

அத்தோடு ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி அந்த விவாதத்தில் பேசும் போது, முதலில் அப்பாவுக்கு விருந்து வைங்க விஜய் என்றும், வாரிசு படத்தின் டைட்டிலுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றால், வாரிசு பட வெளியாவதற்கு முன்னதாக நடிகர் விஜய் அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரை அழைத்து மரியாதை செலுத்த வேண்டும். அத்தோடு தான் வாரிசு படத்தின் டைடிட்லுக்கே மரியாதை என கூறியுள்ளார்.

அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து அஜித் ரசிகர்கள் வாரிசு டைட்டிலை மாத்துங்க விஜய் என டிரெண்ட் செய்து வருகின்றனர். அத்தோடு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே கடும் மோதல் உருவாகி உள்ளது.


சமீபத்தில் தனது மகனுக்கும் தனக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அத்தோடு என் மகனை போல தங்கமான மகன் யாருமே இல்லை என எஸ். ஏ. சந்திரசேகரே பேட்டி அளித்துள்ளார். அதையெல்லாம் கவனிக்காமல் இயக்குநர் பிரவீன் காந்தி ஏதோ பழைய பகையை வைத்து இப்படி பேசுகிறாரென விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement