• Apr 24 2024

இரண்டு பெண்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு கதை கேட்கும் விஜய் சேதுபதி..இது தான் காரணம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக டிஎஸ்பி திரைப்படம் வெளிவந்தது. மேலும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை விஜய் சேதுபதிக்கு தரவில்லை.

இதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் நடிப்பில் மைக்கேல் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள விஜய் சேதுபதியை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இதுமட்டுமின்றி தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.


இவ்வாறுஇருக்கையில், நடிகர் விஜய் சேதுபதி தன்னிடம் கதை கூற வரும் இயக்குநர்களுக்கு எதிர்பார்க்காத ஷாக் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அது என்னவென்றால், நடிகர் விஜய் சேதுபதி கதை கேட்கும் பொழுது தன பக்கத்தில் இரு பெண்களை வைத்துக்கொண்டு தான் கதை கேட்கிறாராம்.


கதை கூறும் இயக்குனர்களிடம் அந்த இரு பெண்களை பார்த்து கதை கூறுங்கள் என்று தான் விஜய் சேதுபதி சொல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 


அத்தோடு அந்த இரு பெண்களும் விஜய் சேதுபதிக்கு நடிப்பு சொல்லித்தரும் பயிற்சியாளர்களாம்.அதனால் தான் அவர்கள் இருவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே கதை கேட்டு வருகிறாராம் விஜய் சேதுபதி.

Advertisement

Advertisement

Advertisement