• Apr 25 2024

விஜய் சேதுபதியுடன் கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகிடிச்சா...? மனம் திறந்து ஓப்பனாக பேசிய பிரபல நடிகை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைக்காரி ஒருவர் காயத்ரி ஷங்கர். இவர் 'நடுவுலா கொஞ்சம் பக்காதா கானோம்' என்ற படத்தின் மூலமாக மக்கள் மத்திய பிரபலமானார். அதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதுமட்டுமல்லாது விஜய்சேதுபதியுடன் இணைந்து 'ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கின்றார்.


இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலே தனது சினிமாப் பயணம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கின்றார். அதில் அவர் கூறுகையில், நான் முதலில் படம் நடிச்ச போது கூட ரொம்ப சந்தோஷப்பட்டேன், என் கல்லூரி நண்பர்களுக்கு கூடி நான் படம் பண்ணியிருக்கேன் என்று கூறி சந்தோசப்பட்டிருக்கேன், ஆனால் 3வருசமாக நான் நடிச்ச படம் வெளி வரவேயில்லை, அதனால் நான் நிறைய பாதிக்கப்பட்டிருக்கேன் எனக் கூறியிருக்கார்.


அத்தோடு நிறையத் தடைகள், வதந்திகளைத் தாண்டி வந்திருப்பதாகவும் கூறி இருக்கின்றார். அந்தவகையில் "விஜய்சேதுபதியுடன் கல்யாணம் ஆகி எனக்கு 10வருஷம் ஆகிடிச்சு என்று கூடி சொன்னாங்க. அது நான் அவர் கூட தொடர்ந்து படம் பண்ணுவதாலேயோ என்னவோ தெரியல" எனக் கூறியும் சிரிச்சிருக்கின்றார்.


மேலும் எனக்கு காயத்ரி என்ற பெயர் பிடிக்கவில்லை, ரொம்பவே பழைய பெயராக இருக்கு, அதனால என்னோட முதல் படத்திலேயே பெயரை மாற்றக் கேட்டாங்க. பிறகு குட்டியாக வேதா என்று ஒரு பெயர் வைச்சாங்க, ஆனால் அந்தப் பெயர் சொல்லி எத்தனை தடவை கூப்பிட்டாலும் நான் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன், அதனால் இப்போ எல்லாருமே காயத்ரி என்று தான் கூப்பிடுவாங்க எனக் கூறியிருக்கின்றார். 

இவ்வாறாக தனது சினிமாப் பயணம் குறித்த நிறைய அனுபவங்களை ரொம்பவே கலகலப்பாக பகிர்ந்திருக்கின்றார் காயத்ரி.

Advertisement

Advertisement

Advertisement