போடா போடி படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் .இதை தொடர்ந்து நானும் ரவுடி தான் , தானா சேர்ந்த கூட்டம் , போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை தன்வசம் வைத்து கொண்டுள்ளார் . இவர் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் படத்தை இயக்கவுள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் பேட்டியொன்றில் அஜித் படத்தின் கதை பற்றி பேசி இருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.அஜித் நடித்த வாலி மற்றும் மங்காத்தா படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மங்காத்தா படத்தின் இடைவேளை காட்சியில் அஜித் மட்டுமே அந்த சீனில் நடித்திருப்பார். அத்தோடு மிக அற்புதமான நடிப்பை நடிகர் அஜித் கொடுத்திருப்பார். நடிகை த்ரிஷா இந்த படத்திற்கு ஓகே சொல்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
மேலும் இந்த காரணத்தால் இது போல் ஒரு வித்தியாசமான கதையில் அஜித்தை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்த போகிறேன் என்றும் அஜித் 62 வது படத்தை வித்தியாசமாக ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிடிப்பது போல் எடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62 வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆரம்பமாக உள்ளது. விக்னேஷ் சிவன் – அஜித் கூட்டணியில் உருவாகும் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்டது.ஆனால் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை த்ரிஷாவிடம் இந்த படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .
அஜித் – விக்னேஷ் சிவன் இணையும் படத்தில் நயன்தாரா நடிக்காமல் இருப்பதற்கு காரணம் அவருக்கு இப்போது தான் இரட்டை குழந்தை பிறந்துள்ளது . மேலும் இந்த காரணத்தினால் நயன்தாராவை விக்னேஷ் சிவன் அஜித் நடிக்கும் படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று முடிவு எடுத்து உள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்
Listen News!