• Apr 18 2024

திமிராகப் பேசும் கண்ணம்மா.. சவால் விட்ட வெண்பா.. உண்மையை கண்டுபிடித்த மது.. பதற்றத்தில் பாரதி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா 2' சீரியலில் இன்றைய தினம் என்ன நடந்தது என்பதனை எபிசோட்டின் வாயிலாக தெரிந்து கொள்வோம்.


அந்தவகையில் இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா மதுவுடன் ஸ்கூலுக்கு வருகின்றார். வந்து சௌந்தர்யாவை பார்த்து மீண்டும் வேலையில் சேர வந்திருப்பதாக கண்ணம்மா கூறுகின்றார். அதற்கு சௌந்தர்யா "ஏதோ தப்பு நடந்து போச்சு என் பையன் சொன்னதால் தான் திரும்பவும் உனக்கு வேலை போட்டு கொடுத்து இருக்கேன்" என சொல்கிறார். அதற்கு கண்ணம்மாவும் நன்றி கூறுகின்றார்.

பின்னர் "சென்னைக்கு போனப்போ அதிகாரி கேட்ட கேள்விக்கு நீதான் பதில் சொன்னியாமே? ஒண்ணும் விடாமல் எல்லாத்தையுமே சொன்னியாமே, பாரதி சொன்னான் அதனாலதான் அப்ரூவல் கிடைத்தது என்று சொன்னான். ரொம்ப நல்லது அதுக்காகத்தான் முக்கியமா திரும்ப வேலை கொடுத்தேன் என கூறுகிறார். 


அதற்கு கண்ணம்மா "பரவாயில்லையே ஓவரா பந்தா பண்ணிட்டு இருந்தான், இங்க வந்து நல்லதா தான் உன்மையை சொல்லி இருக்கான்" என மனதிற்குள் நினைக்கின்றார். பிறகு சௌந்தர்யா கிளம்பி சென்றதும் செல்வம் வெண்பா பாரதியோட போஸ்டிங்குங்கு வந்திருக்காங்க, ஸ்கூல் நிர்வாக பொறுப்பை எடுத்திருக்கு, போகும்போது ஒரு வணக்கத்தை வைச்சிட்டு போயிடுங்க, அப்புறம் அதுக்கு வேற ஏதாவது பிரச்சனை பண்ண போகுது என சொல்ல கண்ணம்மா நான் பாத்துக்குறேன் என கூறி சொல்கின்றார். மேலும் மது என்னடி கண்ணம்மா இது என கேட்கின்றார்.


அதனைத் தொடர்ந்து பின்னர் வெண்பா நினைச்சதை எல்லாம் நடத்தியாச்சு, அத்தையை மடக்கியாச்சு என ரொம்ப சந்தோஷமாக இருக்க அந்த சமயத்தில் கண்ணம்மா உள்ளே வருகிறார். கண்ணம்மாவைக் கண்டதும் இவை எதுக்கு இங்க என மனதிற்குள் நினைத்து கொண்டு இருக்கின்றார்.

அங்கு வந்த கண்ணம்மா வெண்பாவிடம் திமிராக பேசுகின்றார். அதற்கு வெண்பா "திரும்ப ஸ்கூலிற்கு வந்திட்டோம் என்ற திமிரா" எனக் கேட்கின்றார். கோபப்பட வேண்டிய நானே அமைதியாக இருக்கேன் நீ ஏன் துள்ளுகிறாய் என கண்ணம்மா கேட்கின்றார். 

பின்னர் இருவரும் நடந்த விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருக்க கண்ணம்மா நான் கூட விரதம் இருந்தேன் பசி மயக்கத்தில் தூங்கிட்டேன்னு தான் நினைச்சேன் ஆனா இன்னைக்கு காலையில தான் அதுக்கு பின்னாடி ஏதோ சதி நடந்து இருக்குன்னு புரிஞ்சுகிட்டேன். வாட்டர் பாட்டல்ல ஏதோ மருந்து வாசனை வந்தது, அப்புறம் தான் தெரிஞ்சது யாரோ தூக்க மாத்திரை கலந்து இருக்காங்க என சொல்ல வெண்பா முகம் ஒரு மாதிரி மாறுகிறது.

மேலும் "அது யாரோ எல்லாம் கிடையாது நீ தான் என்பது உன் முகம் போற போக்க பார்த்தாலே தெரியுது,  நீ தான் கலந்து வச்சிருக்காய், உன் கன்னத்தில் அறைந்ததை பழி வாங்க தானே இதை செய்தாய்" என கண்ணம்மா சொல்கிறார். 

இதனையடுத்து வெண்பாவும் திமிராக பேசுகின்றார், நான் இங்க போஸ்டிங் வாங்கி வந்திருக்குது உன்ன இந்த ஸ்கூல்ல விட்டு தொறத்தணும்னு தான் வந்திருக்கிறேன் என வெண்பா சொல்ல கண்ணம்மா "உன்ன சுத்தி ரெண்டு பேர் இருக்கும்போது என்ன சுத்தி நிறைய நல்லவங்க இருக்காங்க சௌந்தர்யா மேடம் இருக்காங்க பாரதி இருக்கான்" என சொல்லி வெறுப்பேற்றுகிறார்.

அதுமட்டுமல்லாது அடுத்து இன்னொரு முறை இப்படி ஏதாவது வேலைய பண்ணா இந்த கண்ணம்மா சும்மா இருக்க மாட்டா என எச்சரித்து விட்டு கண்ணம்மா அங்கிருந்து மதுவுடன் கிளம்புகிறார். வெளியே வந்த கண்ணம்மா பாரதியை அங்கும் இங்குமாக தேட மது அது பற்றி நக்கலாக பேசிக் கொண்டிருக்க கண்ணம்மாவின் கையில் ரத்தம் கசிவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு மது கண்ணம்மாவை ஸ்கூலில் உள்ள ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார் மது. 


மேலும் அங்கே கண்ணம்மா கட்டை பிரித்தால் அது வெட்டு காயம் என தெரிந்துவிடும் என பயந்து நடுங்க அந்த நேரத்தில் பாரதி வர மது பாரதியை உடனே கூப்பிடுகிறார். பிறகு டாக்டர் கட்டை பிரித்து மருந்து போட பாரதி அதை பார்த்து என்னால தான் இப்படி ஆனது என வருத்தப்படுகிறார். அத்தோடு காயத்தைக் கண்டா பாரதி பதற்றமடைகின்றார். மது காயத்தை பார்த்து வெட்டுக்காயம் போல இருக்கு என்ன ஏது என கேட்க பாரதி மற்றும் கண்ணம்மா என இருவரும் ஆப்பிள் கட் பண்ணும் போது வெட்டிக் கொண்டதாக சொல்லி இருவரும் சமாளிக்கின்றனர். 


இவ்வாறாக இன்றைய எபிசோட் வெளிவந்திருக்கின்றது. அடுத்து என்ன நடக்கப்போவது என்பதை அடுத்த எபிசோட்டில் பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement