• Apr 19 2024

சிரஞ்சீவி நடிப்பில் 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்.. ஷூட்டிங் ஸ்பொட்டில் இருந்து வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகி ஆல்டைம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘வேதாளம்’.2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். அஜித் உடன், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், ராகுல் தேவ், கபீர் சிங், சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மேலும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். வெற்றி ஒளிப்பதிவு செய்து இருந்தார். ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டார்.2015 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மிகப் பெரிய அளவில் வசூல் செய்த படம் வேதாளம். இந்த படத்தில் டாக்ஸி ஓட்டுனர் & தாதா என இரண்டு கெட்டப்பில் அஜித் நடித்திருந்தார்.

எனினும் தற்போது வேதாளம் படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியில் சல்மான் கான் & பூஜா ஹெக்டே நடிப்பிலும், தெலுங்கில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா நடிப்பிலும் ரீமேக் ஆகிறது.



தமிழில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். அத்தோடு ராம பிரம்மம் சுங்கரா தயாரிக்கும் இந்த படம் “போலா சங்கர்” என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சைரா நரசிம்ம ரெட்டி படத்தை தொடர்ந்து தமன்னா, மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிக்கிறார்.

கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அனில் சுங்கராவின் ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சிரஞ்சீவி மற்றும் மெஹர் ரமேஷ் முதன்முறையாக இணைந்துள்ள இந்த மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படத்தின் பூஜை கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி காலை 7:45 மணிக்கு நடைபெற்றது


இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கியது.இவ்வாறுஇருக்கையில்  இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கி உள்ளது. பிரம்மாண்ட முறையில் கொல்கத்தா நகரத்தின் செட் அமைத்து இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement