• Apr 19 2024

லைகாவுக்கு செலவை இழுத்துவிட்ட வடிவேலு…கடைசியில் இப்படி ஆகிடுச்சே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 நீண்ட இடைவேளைக்குப் பின்னர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில்  கதாநாயகனாக நடித்து வருகிறார் வடிவேலு.சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது.இவ்வாறுஇருக்கையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவின் பிடிவாதத்தால் லைகா நிறுவனம் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் இம்சை அரசன் 24ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் வடிவேலு கமிட்டாகியிருந்தார். ஆனால், வடிவேலுவுக்கும் சிம்பு தேவனுக்கும் ஏற்பட்ட பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அத்தோடு, வடிவேலுவிற்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடாதென்று தயாரிப்பாளர்கள் சங்கள் ரெட் கார்டும் கொடுத்தது. இதனால், வடிவேலுவால் படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் இந்த பிரச்சினைகள் எல்லாம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிவுக்கு வந்தது.

அதாவது ரெட் கார்டு சிக்கல்கள் முடிந்ததை அடுத்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு, மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். அதேநேரம் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் வடிவேலு. 

லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது. அத்தோடு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சிங்கர் ஷிவாங்கி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில்  நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு பாடியுள்ள ஒரு பாடலுக்கு பிரபுதேவா கோரியோகிராபி செய்துள்ளார். இதன் மூலம் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் வடிவேலு - பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், வடிவேலு தான் பிரபுதேவா கோரியோகிராபி செய்ய வேண்டுமென படக்குழுவிடம் பிடிவாதம் பிடித்ததாக கூறப்படுகின்றது. மேலும் இப்பாடலில் பிரபுதேவா ஒரு காட்சியில் தோன்றுவார் என்றும் சொல்லப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பாடலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவும் பிரபுதேவாவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வீடியோவும் வைரலாகி இருந்தது.

பிரபுதேவா கோரியோகிராபு செய்த இந்தப் பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. கதைக்கு தேவையே இல்லாத இந்தப் பாடலை இப்போது க்ளைமேக்ஸ் காட்சிக்கு பின்னர் தான் வைக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளதாம். 

அதனால் இந்தப் பாடலுக்காக செய்த செலவு வீண்தான் என தயாரிப்பு தரப்பில் இருந்து புகார்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்திலும் வடிவேலுவால் பட்ஜெட் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், லைகாவும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக வெளியான தகவல்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement