• Apr 19 2024

கொடுத்த சத்தியத்தை வாப்பஸ் வாங்கிய உதயநிதி- மீண்டும் சினிமாவில் நடிக்கப் போகிறாராம்- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களைத் தயாரித்து வந்தவர் தான் உதயநிதி. தொடர்ந்து நடிகனாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து வந்ததார். கடந்த ஆண்டு திடீரென உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து அரசியலில் பிசி ஆனதன் காரணமாக சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார்.

தற்போது உதயநிதி நடித்து கண்ணை நம்பாதே என்கிற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து அவர் நடித்த மாமன்னன் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வருகிற ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.


இந்நிலையில், மாமன்னன் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.23 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதியின் கெரியரில் இதுவரை இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த படமும் விற்கப்படவில்லையாம். நெட்பிளிக்ஸ் இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியதற்கு மாரி செல்வராஜ் தான் முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது. 


இதற்கு முன் அவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றதால் தான் மாமன்னன் படத்தை இந்த அளவுக்கு விற்பனையாகி உள்ளதாம். மாமன்னன் படத்தின் பிசினஸ் படுஜோராக நடந்து வருவதால், உதயநிதிக்கு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை துளிர்விட்டு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.



Advertisement

Advertisement

Advertisement