• Apr 26 2024

விஜய் மனசு வைச்சால் தான் அது நடக்கும்... அஜித் அப்படி செய்தது ரொம்பவே வருத்தம்... மனம் திறந்து பேசிய உதயநிதி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகனாகவும், அரசியலில் தலை சிறந்த நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவ்வாறாக அரசியல் சினிமா என ஆல்ரவுண்டராக கலக்கி வரும் உதயநிதியின் 'கலகத் தலைவன்' என்ற திரைப்படம் வரும் 18-ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக இருக்கின்றது.


இந்நிலையில் கலகத் தலைவன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சிறப்பாகப் பங்கேற்று வரும் உதயநிதி, அதில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் அந்நிகழ்வில் விஜய் பற்றி பேசிய உதயநிதி, "விஜய் எப்போதுமே எனது நெருங்கிய நண்பர் தான். தேர்தலுக்கு முன்பு என்னை அவரது வீட்டுக்கு அழைத்து விஜய் பெரியளவில் விருந்து கொடுத்தார். 

விஜய் வீட்டில் விருந்து சாப்பிட்டு அவரிடம் வாழ்த்து பெற்ற பின்னரே நான் என்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு சென்றேன். விஜய்யும் பதிலுக்கு என்னை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். அதேபோல் தேர்தலில் வெற்றிப் பெற்றதும் விஜய் செல்போனில் அழைத்துஎனக்கு  வாழ்த்து தெரிவித்தார்" என்றார்.


இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து எப்போது படம் தயாரிப்பீர்கள் என கேட்கப்பட்டதற்கு பதிலளித்த உதயநிதி, "எனக்கு ஆசையாக தான் இருக்குது, விஜய்ண்ணா மனசு வச்சா தான் அது நல்லபடியாக நடக்கும்" எனக் கூறினார். 

இதேவேளையில் அஜித்தின் 'துணிவு' படம் குறித்தும் மனம் திறந்து பதிலளித்து உள்ளார் உதயநிதி. அதாவது "துணிவு படத்தை போனிகபூர் தான் தயாரித்துள்ளார், நாங்கள் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் மட்டும்தான் பண்றோம். துணிவு ப்ரோமோஷனுக்கு அஜித் வருவார் என ரொம்பவே எதிர்பார்த்தேன், ஆனால் அவர் முடியாது என உறுதியாக சொல்லிவிட்டார். 


அதில் எனக்கு சற்று வருத்தம் தான் என்றாலும், ஆனால் அஜித்ண்ணா வேற லெவல், அதனால அவரோட படத்துக்கு ப்ரோமோஷன் கொஞ்சமும் தேவைப்படாது" எனக் கூறியுள்ளார் உதயநிதி. இவ்வாறாக விஜய், அஜித் குறித்து ஒரே மேடையில் உதயநிதி பேசியுள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement