விஜய் நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருவதோடு தெலுங்கு இயக்குநரான வம்சி இப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வாரிசு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தை வாங்க பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில் திடீரென லலித் கைக்கு மாறியதாகவும், அதற்குக் காரணம் விஜய்தான் என்றும் சொல்லப்படுகிறது. விஜய் சொல்லிதான் லலித்துக்கு இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ரெட் ஜெயண்ட் மூவீஸ் தான் பீஸ்ட் திரைப்படத்தையும் வாங்கினதாம். ஆனால் படம் தோல்வியைச் சந்தித்ததால் கேஜி எப் திரைப்படத்தை அனைத்து திரையரங்குகளிலும் ரெட் ஜெயண்ட் ஒளிபரப்பு செய்ததாம்.இதனால் வாரிசு திரைப்படத்திற்கும் இப்படி செய்து விடுவார்களோ என்ற பயத்தில் தான் விஜய் லலித்திடம் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
Listen News!