• Mar 29 2024

ஒரே நாளில் நடந்த இரண்டு எவிக்ஷன்- எதிர்பாராத டுவிஸ்ட் அன்ட் சர்ப்ரைஸ் உடன் நகரும் பிக்பாஸ் ஷோ - நடந்தது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள பிக் பாஸ் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். ஜி.பி.முத்து, அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின், சாந்தி, அசீம், ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்டன், ரச்சித்தா, ராம் ராமசாமி, ஏடிகே, மகேஸ்வரி, அமுதவாணன், விஜே கதிரவன், குயின்ஸி, நிவாசினி, தனலட்சுமி, விக்ரமன்,மைனா என 21 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. காரசாரமான சண்டையுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு நாட்களில் முடிய உள்ளதால், சோஷியல் மீடியாவின் ஒட்டுமொத்த பார்வையும் பிக் பாஸ் நிகழ்ச்சி மீது திரும்பி உள்ளது.


அசீமின் கடுமையான வார்த்தைகள், விக்ரமனின் புரட்சிகரமான சிந்தனை பேச்சு, ஷிவினின் தைரியம், மைனா, அமுதவாணனின் பழங்காலத்து ஜோக், ஏடிகேவின் ரேப் பாடல், ஜனனியின் கொஞ்சும் இலங்கை தமிழ், மெட்டி ஒலி சாந்தியின் உப்புமா சமையல், ரச்சித்தா ராபர்ட் மாஸ்டரின் ரொமான்ஸ், சிரித்த முகத்துடன் இருந்து பெண் ரசிகர்களை வளைத்துப்போட்ட கதிர் என இந்த சீசன்6 கலவையாகவே இருந்தது.


அந்த வகையில் நேற்றைய தினம் என்ன நடந்தது என்ற பார்ப்போம்.ஷிவினிக்கு அவரது பயண வீடியோ போட்டுக்காட்டப்பட்டது.அத்தோடு ஷிவினைப் பார்த்து பிக்பாஸ் "உங்களால இந்த வீட்டிற்கும், இந்த நிகழ்ச்சிக்கும், என் இந்த முழு சமூகத்திற்குமே பெருமை. நீங்க இனிமேல் எங்கும் ஒழியத் தேவையில்லை, உங்களை வரவேற்க வெளியில் ஏராளம் தாய்மார்கள் உள்ளனர்" எனக் கூறுகின்றார். அதற்கு உடனே ஷிவின் கை எடுத்துக் கும்பிட்டு கதறி அழுது "எல்லாருக்குமே நன்றி, நான் வந்த வேலை முடிஞ்சிடிச்சு என்று நினைக்கிறேன்" என்று கூறுகின்றார்.


இதன் பின்னர் பணப் பெட்டியை யார் எடுக்கப் போகின்றார்கள் என எதிர்பார்ப்பு நிலவி வந்த வேளையில் அமுதவாணன் 1175000 ரூபா பணத்துடன் பணப் பெட்டியை தான் எடுத்துக் கொண்டார்.இதனால்  போட்டியாளர்கள் அனைவரும் சோகமடைந்தனர். இதனையடுத்து, பேசும் விக்ரமன்,"அமுதவாணன் தன்னுடைய வெற்றி எதுன்னு தேர்ந்தெடுத்திருக்கிறார். பிறர் கொடுக்குற வெற்றியை விட, தனக்கான வெற்றியை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த வீட்டுல அவர் யாரையும் போட்டியாளரா பார்க்கல. அவர் எல்லோருக்கும் உதவி செஞ்சிருக்காரு. நீங்க இந்த போட்டிபோட வரல. வாழ வந்தீங்க. வாழ்ந்துட்டீங்க. நீங்க ரியல் ஹீரோ அமுதவாணன். நிறைய கலைஞர்களை நீங்க உருவாக்குறீங்க-ன்னு தெரியும். இதுக்கு மேலையும் நிறையபேரை உருவாக்குவீங்க நம்புறோம். நிறையபேருக்கு காட்ஃபாதர் நீங்க. இப்படியே உங்க பணிகளை தொடருங்க" என்கிறார். இதனையடுத்து, அமுதவாணனுக்கு போட்டியாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.


இந்நிலையில், அமுதவாணன் வெளியேறுவதால் உணர்ச்சிவசப்பட்ட விக்ரமன் உடைந்து அழுதார். ஆரம்பத்தில் இருந்தே அமுதவாணன் - விக்ரமன் நல்ல நண்பர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வலம்வந்தனர். இந்நிலையில் அமுது பணப்பெட்டியுடன் வெளியேறுவதாக அறிவித்ததையடுத்து விக்ரமன் கண்ணீர் விட்டு அழ அங்கிருந்த அசீம், ஷிவின் ஆகியோர் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.தொடர்ந்து, அமுதவாணனும்,"நீங்க அழக்கூடாது விக்ரமன். நீங்க எல்லாம் கெத்தா இருக்கணும்" என்றபடி அவரை கட்டியணைத்துக்கொள்கிறார். அப்போது அங்கிருந்த ஷிவின் இன்னும் இரண்டு நாட்களில் அவரை வெளியே சந்திக்கலாம் என விக்ரமனுக்கு ஆறுதல் கூறினார். 

தொடர்ந்து அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து ஏன் என்பது பற்றி பேசினார். அவர் பேசும்போது,"கெத்த மெயிண்டைன் பண்ணி கடைசில இப்படி ஆகிட்டோமோ-ன்னு யோசிக்க கூடாது. இது எப்படியும் எனக்கு யூஸ் ஆகும். இது நெறய ஹெல்ப்-ஆ இருக்கும். அதுனால எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்னு தான் எடுத்தேன்" என்றார்.


அப்போது விக்ரமன் அப்போது அவருக்கு ஆறுதல் கூற,"எப்படியா இருந்தாலும் 5 பேர்ல ஒருத்தர் தான் வெற்றியாளர். அதுனால இது நல்ல முடிவு. நீங்க எட்டரை கோடி தமிழ் மக்களோட நெஞ்சத்துல ராஜாவா இருக்கீங்க. இந்த வீட்டுல நான் அதிகமா பேசி, சிரிச்ச ஒரு நபர் என்றால் அது நீங்கதான். நான் வந்த புதிதில் சொன்னேன். எளிய மக்களுக்கான கலையை நீங்க கையில வச்சிருக்கீங்க. நீங்க ஒரு எளிய கலைஞன். அதேநேரத்துல பிரம்மாண்ட கலைஞன். பொதுமக்களோட அன்பையும் பெற்றுட்டீங்க.


கமல் அண்ணா சொன்னது மாதிரி இது உங்களுக்கான வழி பெரிய வழி. இது ஒரு நிகழ்ச்சி அவ்வளவுதான். இதுக்கு அப்புறம் உங்களுக்கு பெரிய வாழ்க்கை இருக்கு. நீங்க காமெடியன் மட்டும் இல்ல ஹீரோவும் கூட. நீங்க கதாநாயகனா வருவீங்க பாருங்க" எனச் சொல்ல அமுதவாணன் விக்ரமனிடத்தில் நன்றி சொன்றதோடு வீட்டை விட்டு வெளியேறினார்.


தொடர்ந்து  4 போட்டியாளர்கள் மட்டுமே பைனலிஸ்ட் ஆக இருந்த நிலையில் மிட் வீக்  என்னும் ஒரு எவிக்ஷன் நடைபெற்றது.அதில் ஒவ்வொரு போட்டியாளராக ஹைட்ராலிக் லிப்ட் மேல் நிற்க வேண்டும் என்றும், அது கீழே இறங்கி மேலே வரும்போது போட்டியாளர் இல்லை என்றால் அவர் எலிமினேட் ஆனதாக அர்த்தம்.இதன் படி இந்த முறையில் இருந்து மைனா நந்தினி வெளியேறினார். இது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இத்துடன் இந்த எப்பிஷோட்டானது முடிவடைந்தது.














Advertisement

Advertisement

Advertisement