• Mar 28 2024

தூக்கிட்டுத் தற்கொலை செய்த டிவி நடிகர்... மனைவி 5மாதம் கர்ப்பம்.. உண்மையை கூறிய பிரபலம்.. குழந்தையின் நிலை..? வருந்தும் ரசிகர்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

கன்னட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சம்பத் ஜெயராம். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.மேலும் இவர் பெங்களூர் நெலமங்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பத் ஜெயராம் திடீரென்று நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 


சம்பத் ஜெயராம் மறைவு கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் தான் Shri Balaji Photo Studio என்ற திரைப்படம் திரைக்கு வந்தது. இருப்பினும் சம்பத் தனக்கு சமீபகாலமாக நடிக்க வாய்ப்புகள் வருவதில்லை என மன அழுத்தத்தில் இருந்திருக்கின்றார். அத்தோடு கடந்த வருடம் தான் அவருக்கு திருமணமும் நடைபெற்று இருக்கிறது. 


இந்நிலையில் அக்னி சாட்சி கன்னட சீரியலில் சம்பத் ராமுடன் சேர்ந்து நடித்த வைஷ்ணவி சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பல விடயங்களை பகிர்ந்து இருக்கின்றார். அதாவது "சம்பத் ராம் எப்பொழுதும் சிரித்த முகமாக இருப்பார். ஷூட்டிங்ஸ்பாட்டில் அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். அந்த சீரியலில் என் சகோதரராக நடித்தார் சம்பத் ராம். 

அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தாலே ஜாலியாக இருக்கும். வாழ்க்கை பற்றி அவர் குறை சொல்லி நான் கேட்டதே இல்லை. ஒரு நாள் கூட அவர் செட்டில் கவலையாக இருந்தது இல்லை. அக்னி சாட்சி சீரியல் முடிந்து தற்போது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பிறகு நான் அவரை சந்தித்து பேசவில்லை. இருப்பினும் அவர் ஒரு பார்ட்டிக்கு அழைத்தார். அதாவது தன் திருமணத்திற்கு அழைத்தார். ஆனால் வேலை இருந்ததால்  என்னால் அங்கு செல்ல முடியவில்லை.


ஆனாலும் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை என்பதால் சம்பத் ராமுக்கு போன் செய்து வாழ்த்தினேன். அவருக்கு திருமணமாகி தற்போது ஓராண்டு கூட இன்னும் ஆகவில்லை. அவரின் மனைவிஇப்போது 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கேள்விப்பட்டேன். இந்த நேரத்தில் அவர் ஏன் இப்படி செய்தார் என தெரியவில்லை. சம்பத் ராம் ஏன் இப்படி செய்தார் என எனக்கு எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. நடிப்பு தவிர்த்து அவர் ஒரு பிசினஸும் செய்து வந்தார்" எனக் கூறியுள்ளார்.

இவ்வாறாக மனைவி 5மாதம் கர்ப்பமாக இருக்கின்ற நிலையில் கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டமை ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. மேலும் பிறக்கப் போகும் அந்த குழந்தை தந்தை இல்லாமல் இருப்பது எவ்வளவு கொடுமையானது எனவும் ரசிகர்கள் கூறி அவருக்காக வருந்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement