• Apr 18 2024

'பொன்னியின் செல்வன்' ப்ரோமோஷன்ஸ் நிகழ்விற்கு இளவரசி போல வந்த த்ரிஷா... அதுவும் கறுப்பு நிற புடவையில்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திர நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் 1999-ஆம் ஆண்டு பிரசாந்த்-சிம்ரன் நடித்த 'ஜோடி' என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து தனது திரைப் பயணத்தை தொடங்கியவர்.

அதன்பின்னர் 2002-ஆம் ஆண்டு வெளியான 'மௌனம் பேசியதே' என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.


அப்படத்தினைத் தொடர்ந்து த்ரிஷாவின் சினிமா பயணம் ஓஹோ என்ற அளவிற்கு சூப்பராக வளர்ந்து சென்றது. அதாவது தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிப் படங்களிலும் நடித்தார்.

இவ்வாறாக பல படங்களிலும் தன்னுடைய நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்ற த்ரிஷா நடிப்பில் தற்போது 'பொன்னியின் செல்வன்' என்ற பிரமாண்ட படம் உருவாகி வருகின்றது.


இப்பிரம்மாண்ட படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். அப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தினுடைய படிப்பிப்புக்கள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் ப்ரோமொஷன்ஸ் பணிகள் இடம்பெற்று வருகின்றன.


இந்த ப்ரோமோஷன் பணிகளுக்காக த்ரிஷா விதம் விதமான உடையணிந்து அதனைப் புகைப்படமாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்கப் பக்கங்களில் இட்டு வருகின்றார்.

அந்தவகையில் தற்போதும் கறுப்பு நிறத்தில் புடவையணிந்து இளவரசி போன்று ப்ரோமோஷன் நிகழ்விற்கு சென்றிருக்கின்றார். 


இப்புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement