• Mar 29 2024

விஜய் குடும்பத்தில் குழப்பம்; படப்பிடிப்பை இடையில் நிறுத்தினாரா த்ரிஷா? உண்மையை உடைத்த பிரபலம்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சினிமாவில் எந்தளவிற்கு பிஸியாக இருக்கின்றாரோ அந்தளவிற்கு சமீபகாலமாக பல சர்ச்சைகளிலும் சிக்கிய வண்ணம் தான் இருக்கின்றார். அதாவது ஆரம்பத்தில் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் பிரச்சினை எனவும் தற்போது விஜய் தந்தையை பிரிந்து இருக்க காரணம் அவரது மனைவி சங்கீதா தான் எனவும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.


அதன் பின்னர் விஜய் தனது மனைவியை விட்டுப் பிரிந்து விட்டதாகவும் அதற்குக் காரணம் கீர்த்தி சுரேஷ் தான் எனவும் ஒரு வதந்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது விஜய் குறித்த மற்றோர் தகவலும் வெளியாகி இருக்கின்றது.


அதாவது லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருன்ற நிலையில், இந்த படப்பிடிப்பில் இருந்து சமீபத்தில் த்ரிஷா திடீரென மும்பைக்கு கிளம்பினார். இதனைத் தொடர்ந்து படத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டாரா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் ஓரிரு நாட்களில் மீண்டும் த்ரிஷா காஷ்மீருக்கு சென்று லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்டார். காஷ்மீரின் குளிர் தாங்கமுடியாமல் தான் த்ரிஷா அங்கிருந்து கிளம்பி மும்பை சென்றதாக கூறப்பட்டது.


இந்நிலையில் இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது "லியோ படத்தின் படப்பிடிப்பில் இருந்து த்ரிஷா திடீரென கிளம்பி மும்பைக்கு சென்றதற்கு காஷ்மீரின் குளிர் மட்டும் காரணம் இல்லை. அங்கு எதோ ஒரு பிரச்சனை நடந்துள்ளது. மேலும் விஜய் குடும்பத்தில் ஒரு சலசலப்பு சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த சலசலப்புக்கு காரணம் த்ரிஷா என்பது போல் தான் அவர்கள் தெரிவிக்கின்றனர்" எனக் கூறியுள்ளார்.


மேலும் "இவர் காஷ்மீர் சென்றதும், அவருக்கு எதோ ஒரு அழுத்தம் சென்னையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே த்ரிஷா படப்பிடிப்பில் இருந்து கிளம்பினார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், இவை யாவும் உண்மையில்லை என்று தற்போது லியோ படக்குழுவினர் மறுத்துள்ளனர்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement