• Apr 19 2024

'கொக்கர கொக்கரக்கோ' பாடலுக்கு வந்த மவுசு- டான்ஸ் ஆடிப் பட்டையைக் கிளப்பும் பள்ளி மாணவிகள்- ட்ரெண்டிங் வீடியோ

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் 'கில்லி'. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் படத்தில் உட்பட பல திரைப் பிரபலங்கள் நடித்து இருந்தார்கள்.


அட்டகாசமான கதையம்சத்தைக் கொண்ட இப்படம் மட்டுமன்றி இதில் வரும் அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட் அடித்திருந்தது. இந்நிலையில் கில்லி படத்தில் வரும் “கொக்கர கொக்கரக்கோ” பாடல் பல வருடம் கழித்து தற்போது ஷோசியல் மீடியாவில் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது சமீபத்தில் பள்ளி மாணவிகள் இப்பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது. 


இதனைத் தொடர்ந்து இப்பாடலை பாடிய உதித் நாராயணன் அவர்களை பிரபல செய்தி ஊடகம் ஒன்று பேட்டி எடுத்திருந்தது. அதில் தற்போது ட்ரெண்டாகி வரும் “கொக்கர அதில் பாடல் குறித்து முக்கியமாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “நான் மும்பைக்காரன் என்றாலும் தமிழ் இளைஞர்கள் பலரும் நான் பாடிய “கொக்கர கொக்கரக்கோ” பாடலுக்கு அழகாக நடனமாடி சோசியல் மீடியாக்களில் ரீலிஸ் பதிவிட்டு வருவது எனக்கு ரொம்பவே மகிச்சியாக இருக்கிறது.


மேலும் இந்தப் பாடல் இவ்வளவு வருடங்கள் கழித்து ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. ஆனால் இந்த பாடல் வெளியான போதே பெரிய ஹிட் அடித்ததோடு மட்டுமில்லாமல் படமும் சூப்பர் ஹிட் அடித்ததது. இந்த பாடலை பாட எனக்கு வாய்ப்பளித்த “கில்லி” படத்தின் இசையமைப்பாளர் வித்தியாசாகர் சாருக்கும், சூப்பர் ஸ்டார் விஜய் சாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். 


கில்லி பாடல் வரிகள் என்னுடைய குரலினால் ஹிட் அடித்தாலும் அதற்கு முக்கியமான காரணமாக இருந்தது விஜய் தான். அவர் அந்த பாடலுக்கு மிகவும் அருமையாக நடனமாடி இருக்கின்றார். எப்போதுமே எனக்கு விஜய்யின் மீது தனிப்பட்ட மரியாதை இருக்கிறது. கில்லி படம் ஹிட் அடித்த போது நான் விஜய் சாரை சந்திக்கவில்லை. ஆனால், நான் பாடியது விஜய்க்கு பிடித்திருந்த காரணத்தினால் தான் விஜய் சார் அதனை ரொம்பவே ரசித்து பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். 


இருப்பினும் படம் ஹிட்டான பிறகு விஜய் சார் எனக்கு நன்றி சொன்னதாக தரணி என்னிடம் கூறினார். “கொக்கர கொக்கரக்கோ” பாடலில் என்னுடைய முழு திறமையையும் பயன்படுத்தி பாடினேன் அதற்கான பலனை தமிழ் மக்கள் எனக்கு இன்றுவரை கொடுத்து வருகின்றனர்" என்று மகிச்சியாக கூறினார் பாடகர் உதித் நாராயணன்.

Advertisement

Advertisement

Advertisement