விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் ராஜா ராணி 2 .இத் தொடர் மக்களிடம் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிரவீன் பென்னட் இயக்க குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்கும் இந்த தொடர் ஹிந்தி சீரியலான தியா அவுர் பாதி ஹம் என்ற சீரியலின் ரீமேக்.
இத் தொடரில் முதலில் சித்து மற்றும் ஆல்யா மானசா முதன்முதலில் ஜோடியாக இதில் நடித்து வர இப்போது நாயகி மாற்றப்பட்டுள்ளார். ரியா என்பவர் சந்தியாவாக நடித்து இப்போது தான் மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
இப்போது அவரது நீண்டநாள் கனவான போலீஸ் ஆவதற்கான டிராக் சென்று கொண்டிருக்கின்றது.
மேலும் இந்த ராஜா ராணி தொடரில் போலீஸ் டிராக் ஓடிக் கொண்டிருக்க சில புதிய நடிகர்களும் இணைந்துள்ளார்.எனினும் அந்த வகையில் இந்த தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் லோகேஷ் பாஸ்கரன். இவரது காரின் பின்னால் உடைத்து அவருடன் பயணித்த Aamod என்பவரின் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடியுள்ளார்களாம்.
அதனை கண்டுபிடித்து தருமாறு லோகேஷ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதோ அவர் கொடுத்த புகார்,
Listen News!