• Apr 20 2024

இனியாவைத் திட்டித் தீர்க்கும் ராதிகா- சப்போர்ட் பண்ணிய ராமமூர்த்தி- சிக்கித் தவிக்கும் கோபி- 'பாக்கியலட்சுமி' இன்றைய எபிசோட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம். அந்தவகையில் பாக்கியா சமைக்கும் இடத்திற்கு வந்து அவர்களுடன் பேசிய பிறகு எழில் பசிக்கிறது என சொல்ல பாக்கியா அவனுக்கு சாப்பாடு போட்டு கொடுக்க எழில் சாப்பிடும்போது பாக்கியா மற்றும் அமிர்தாவுக்கு தன் கையால் ஊட்டி விடுகிறார்.

அதேபோன்று மறுபக்கம் ஜெனி நிலா பாப்பாவை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது அதைப் பார்த்த செழியன் முதல்ல வெளியே கூட்டிட்டு போ என சத்தம் போட ஜெனி அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நிலா பாப்பாவுடன் சந்தோசமாக விளையாடி வருகிறார்.


அந்த சமயத்தில் ஜெனியின் அம்மா போன் பண்ண ஜெனி போன் பேச எழுந்து பார்க்க நிலா பாப்பா பெரியப்பா பெரியப்பா என்னை கூப்பிட்டுக் கொண்டு கையில் ஹாட்டின் சிம்பல் காட்டி முத்தமிட்டு செழியன் அருகே சென்று அவனுக்கு முத்தமிட செழியன் மனம் அப்படியே மாறுகிறது.

அதன் பின்னர் செழியனும் நிலாவை தூக்கி கொஞ்ச வர ஜெனி உள்ளே வருவதால் செழியன் உடனே சற்று தள்ளிப் போய் விடுகிறார். அதேபோன்று மறுபக்கம் இனியா படிக்காமல் போன் நோண்டிக் கொண்டிருக்க ராதிகா இனியாவை கண்டபாட்டுக்கு திட்டி போனை புடுங்கி நாளைக்கு வரைக்கும் நீ இந்த போனை எடுக்கவே கூடாது என அவரிற்கு கண்டிஷன் போடுகிறார்.


மேலும் "நீ படிக்கணும் உங்க அம்மா இருந்திருந்தாலும் அதை தான் பண்ணுவாங்க" என சொல்ல, அதற்கு "நீங்க ஒன்னும் என் அம்மா இல்லையே" என இனியா பதிலடி கொடுக்க ராதிகா நீ என்ன சொன்னாலும் நீ இங்க இருக்கிற வரைக்கும் நான் உன்னுடைய அம்மா ரோல் தான் எடுப்பேன் என இனியாவை திட்டி மீண்டும் படிக்க சொல்கிறார்.

அதன் பின்பு இனியா கோபியிடம் என்ன டேடி இவங்க எனக்கு கண்டிஷன் எல்லாம் போட்டுட்டு இருக்காங்க என சத்தம் போட கோபி நான் சமாளிக்கிறேன், கொஞ்சம் அமைதியா இரு என சொல்ல ராமமூர்த்தி  அதைப் பார்த்து விட்டி கோபியை திட்டுகிறார். அவ கேட்டது தான் சரி. நீ பண்ண வேண்டிய வேலையை அவ பண்ணிக்கிட்டு இருக்கா என ராதிகாவுக்கு சப்போர்ட் செய்ய இனியா, கோபி என இருவரும் சற்று அதிர்ச்சி அடைகின்றனர். அது மட்டுமல்லாது ராமமூர்த்தி கூறியதற்கு எந்தப் பதிலும் திரும்ப கூற முடியாமல் தவிக்கின்றார் கோபி.


இதனைத் தொடர்ந்து மறுநாள் காலையில் இனியா 5:30 மணிக்கு அலாரம் வைத்து படிப்பதாக சொல்ல அலாரம் அடித்துக் கொண்டு இனியா தெரிந்து கொள்ளாமல் படுக்க ராதிகா இனியாவை எழுப்பி படிக்க சொல்லி பேசி மிரட்ட தாத்தாவும் படிக்க சொல்ல உடனே இனியா படிக்கிறேன் எனக் கூறி எழுந்து உட்காருகிறார்.

அதேபோல் மறுபக்கம் வீட்டுக்கு வந்த பாக்கியா, அமிர்தா, ஜெனி, செல்வி என எல்லோரும் உட்கார்ந்து சந்தோஷமாக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். இவ்வாறாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. இதன் பின்னர் அடுத்து என்ன நடக்க போகின்றது என்பதனை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement

Advertisement