• Mar 28 2024

வீட்டை விட்டுக் கிளம்பிய கண்ணம்மா- வாக்குறுதி அளித்த பாரதி- சௌந்தர்யாவிற்கு தெரிய வந்த உண்மைகள்- 'பாரதி கண்ணம்மா 2' இன்றைய எபிசோட்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலானது முதலாவது சீசன் போலவே விறுவிறுப்பிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

அந்தவகையில்  இன்றைய எபிசோட்டில் சௌந்தர்யா ஒரு இடத்தில் இருந்து பாரதிக்கு கல்யாணம் நின்று போனதை நினைத்து மிகுந்த வருத்தத்தோடு சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க அப்போது வரும் பாரதி சௌந்தர்யாவுக்கு பலவாறு ஆறுதல் சொல்கிறான்.


அதற்கு சௌந்தர்யா பாரதியைப் பார்த்து "உங்கப்பா எப்படிப்பட்டவர் தெரியுமா அவர் நடந்து போன ஊர்ல இருக்க எல்லோரும் கையெடுத்து கும்பிடுவாங்க நீயும் அந்த மாதிரி ஒரு நல்ல நிலைமைக்கு வரணும் என்பதுதான் என்னுடைய ஆசை" என சொல்கின்றார். அதற்கு பாரதி "நீங்க ஆசைப்படுற மாதிரி கண்டிப்பா நான் மாறுவேன் கொஞ்சம் கொஞ்சமா என்னுடைய கெட்ட பழக்கங்களை விட்டு விடுறேன்" என வாக்குறுதி கொடுக்கிறான். 

இதைக் கேட்டதும் உடனே ஷர்மிளா என்ன இவன் இப்படி சொல்கிறான் என நினைத்து வருத்தப்பட, அதற்கு விஜய் நான் உன்ன திருந்த விட மாட்டேன் என சொல்கிறான்.


அதேபோன்று மறுபக்கத்தில் கண்ணம்மா உண்மையான கண்ணம்மாவின் போட்டோவை பார்த்துக் கொண்டு என்னால இந்த வீட்டில நிறைய பிரச்சனை அப்பா ரொம்ப வருத்தப்படுறாரு, அதனால வீட்டை விட்டு கிளம்பலாம் என்று முடிவு பண்ணி இருக்கேன் என சொல்லி தனது பேக்கை தூக்கி கொண்டு கிளம்ப வெளிக்கிடுகின்றார்.

அந்த சமயத்தில் கண்ணம்மாவின் அம்மா இரும்பல் வந்து உடம்பிற்கு முடியாமல் தவிக்க கண்ணம்மா ஓடிப்போய் மருந்து கொடுத்து அவரை தேற்றுகிறார். அதன் பின்னர் கண்ணம்மாவின் முகத்தைப் பார்த்து "அழுதுகிட்டு இருந்தியா உங்க அப்பாவுக்கு பாசத்தைக் கூட கோபமாகத்தான் காட்ட தெரியும் அவர் திட்டுனதுக்காக நீ வீட்டை விட்டு போயிடாத அப்புறம் நான் பழையபடி படுத்த படுக்கையா ஆகி அப்படியே போய் சேர்ந்திடுவேன்" என சொல்கின்றார். 

அதற்கு உடனே கண்ணம்மா நான் போக மாட்டேன் என வாக்கு கொடுக்கிறார். அதுமட்டுமல்லாது உண்மையான கண்ணம்மாவின் போட்டோவைப் பார்த்து யார் அவமானப்படுத்தினாலும் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என் சபதம் எடுக்கின்றார். மேலும் அங்கு வந்த கண்ணம்மாவின் அக்கா உண்மையான கண்ணம்மாவின் புகைப்படத்தைக் காட்டி யார் என்று கேட்கின்றார். அதற்கு "அது சித்ரா என்னுடைய நண்பி" என்று சொல்லி சமளிக்கின்றார். 


பின்னர் பாரதியின் அம்மா உன்னால என் பையனோட பொண்ணு பாக்கிற நிகழ்வே நின்னு போச்சு என்று சொல்லி கண்ணம்மாவைத் திட்டி மிரட்டுகின்றார். அதற்கு கை எடுத்துக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்கின்றார் கண்ணம்மா. அதன் பின்னர் அன்றைய தினம் பாரதிக்கும் , தனக்கும் நடந்த உண்மையான பிரச்சினை என்ன என்பதையும் கூறுகின்றார். இவ்வாறாக இன்றைய எபிசோட் நிறைவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement