• Apr 20 2024

இனிமேல் இதெல்லாம் சரி வராது- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய சாய் காயத்திரி சொன்ன பதில்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு என்று பல ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த தொடரிலிருந்து தற்போது முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேறியிருக்கிறார். ஆரம்பத்தில் கண்ணனுக்கு ஜோடியாக வைஷாலி என்கிறவர் நடித்து வந்தார். 

பின்னர் அவர் மாற்றப்பட்டு விஜே தீபிகா நடித்து வந்தார். அவருக்கு முகத்தில் அதிகமாக பரு இருந்ததால் அவர் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்து வருகிறார். இப்போது அவரும் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது.


அதற்கமைய சாய் காயத்திரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகுவது உண்மை தான் . இந்த சீரியலில் இனியும் நடிப்பது எனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கவில்லை. இனிவரும் கதை என்னுடைய கெரியரையே மாற்றி விடலாம். இதனை அடிப்படையாகக் கொண்டே சீரியலில் இருந்து விலகுகின்றேன். என்னுடைய கருத்துக்கு மதிப்புக் கொடுத்த டீம் மற்றும் விஜய் டிவிக்கு ரொம்ப நன்றி. அதே போல மக்களுக்கும் ரொம்ப நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் சாய் காயத்திரிக்கு பதிலாக முன்பு முகத்தில் பருக்கள் இருந்த காரணத்தால் நீக்கப்பட்ட விஜே தீபிகாவே மீண்டும் ஐஸ்வர்யாவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Advertisement

Advertisement

Advertisement