• Apr 25 2024

பிரியாணி விருந்துக்கு பின் இதை தான் விஜய் பேசினாராம்- ரசிகர்கள் கூறிய விசயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் இன்று அவரது ரசிகர்களை நேரடியாக சந்தித்து பேசியுள்ள விடயம் இணையத்தளத்திலும் சரி மீடியாக்களிலும் சரி வைரலாகி வருகின்றது. கொரோனா காரணமாக கடந்த சில வருடங்களாக சந்திப்பு நடைபெறாத நிலையில் தற்போது விஜய் சந்திப்பை மீண்டும் தொடங்கி இருக்கிறார்.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் இயக்க நிர்வாகிகள் இன்று கலந்துகொண்டனர்.

மேலும் அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த விஜய், அதன் பின் அவர்களுடன் உரையாடி இருக்கிறார்.

அப்போது விஜய் ரசிகர்களுக்கு அவர் அட்வைஸ் கூறி இருக்கிறார். "முதலில் குடும்பத்தை பாருங்க, தொழிலை சரியாக கவனிங்க, அதன் பின்னர்  வருமானத்தில் 1 சதவீதமோ 2 சதவீதமோ ஒதுக்கி மக்கள் நல பணிகளை செய்யுங்கள், அதிகம் ரிஸ்க் எடுக்க வேண்டாம்" என விஜய் கூறியதாக  வெளியில் வந்த ரசிகர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த வருடம் பொங்கலுக்கு வாரிசு படம் ரிலீஸாகும் நிலையில், அது பற்றி எதுவும் விஜய் பேசவில்லை என்றும் கூறி உள்ளனர்.

அத்தோடு ஒவ்வொரு ரசிகருடனும் தனித்தனியாக அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement