• Apr 16 2024

அவன் சாவுக்கு இவ்வளவு மக்கள் வந்ததற்கு இது தான் காரணம்- பலரும் அறியாத மயில்சாமியின் மறுபக்கம்- போட்டுடைத்த பிரபல நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கடந்த பிப்ரவரி 19-ந் தேதி அதிகாலை மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இதனை அடுத்து இவருடைய மகன் அன்புவும் இவருடைய நெருக்கமான நண்பர்களும் பல்வேறு சேனல்களுக்கும் பேட்டி அளித்து வருகின்றார்கள்.

அந்த வகையில் நடிகர் சுந்தர் என்பவர் பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதாவது மயில்சாமியை எனக்கு 30 வருடமாகத் தெரியும் வாய்ப்பு வேண்டும் என்று அடிக்கடி ஆட்டோவிலையே திரிவான். ஆட்டோக்காரன்களுக்கும் இவனுக்கும் எப்போதும் நல்ல உறவு இருக்கும். ரொம்ப தன்னம்பிக்கை நினைஞ்ச ஆளு தான் இவன்.


அவன் காமெடியான நடிக்க ஆரம்பித்த போது தான் கார் வாங்கினான். அதையும் என்கிட்ட சொன்னான். இவன் காமெடியனாக வலம் வரும் போது  என்ன என்றாலும் நேராகவே சொல்லிடுவான். சினிமாவில் கொஞ்ச நாள் பிரேக் எடுத்திட்டு ஒரு டிவில ஷோ பண்ணலாம் என்று வந்தான். அதில இரண்டு வருஷம் நிறைய ஷோ இரண்டு பேருமே சேர்ந்து பண்ணிட்டு இருந்தோம்.திடீர்னு மூடு இல்ல என்று அதையும் விட்டுட்டான்.

ரோட்டுக்கடையில தான் அதிகம் சாப்பிடுவான். அதுவும் மாமிச உணவு என்றால் ரொம்ப பிடிக்கும். அதே போல எம்.ஜி.ஆர் வெறியன். அவரைப் போலவே தன்னிடம் இருக்குதோ இல்லையோ மற்றவங்களுக்கு கொடுக்கிறதிற வள்ளல் அவன். எல்லோருக்குமே கொடுத்து சாப்பிடுவான். வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்த மனிதன் என்றால் அது மயில்சாமி தான்.


இவன் முதன்மையான காமெடியன் இல்லை.இரண்டாவது நிலை காமெடியன் தான் ஆனால் அவனோட இறப்புக்கு நிறைய மக்கள் வந்தாங்க. அதுக்கு காரணமே,மயில்சாமி நிறையப்பேருக்கு நல்லது செய்தது தான். அவன் ஒரு சிறந்த மனிதன்.அவன் குடிக்கிறதை ஓபனாக சொன்னான் பாருங்க. அவனுக்கு யாருக்கும் பயமும் இல்லை சண்டையும் இல்லை. எதிரிகளை சம்பாதிக்காத மனிதர் என்றால் அது மயில்சாமி தான்.


அவன் கிட்ட பேசணும் என்று 10 நாளுக்கு முதல் தோணிச்சு. ஆனால் கொஞ்சம் வேலை பிஸியாக இருந்ததால் பேச முடியாமல் போயிட்டு எனக்கு அவன் இறந்தப் பிறகு 50 பேர் கிட்ட கோஃல் பண்ணி பேசினாங்க.வாழும் போது நல்ல வாழ்க்கை வாழ்ந்த மனிதன் என்றால் மயில்சாமி தான். எந்த இன்டர்வியூல பேினாலும் போன் பண்ணி கேட்பான். அந்த இன்டர்வியூ பார்த்தியா? நான் நல்லாப் பேசினனா? என்று கேட்பான். அவனுக்கும் எனக்கும் எப்போதும் செல்ல சண்டை வரும்.அப்படி ஒரு நல்ல நட்பு நமக்குள் இருந்திச்சு என்றும் அவர் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement