• Apr 20 2024

விஜய் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு காரணம் இது தானாம்! - சீமான் ஓபன் டாக்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் ஏன் சூப்பர் ஸ்டார் என காரணம் கூறியுள்ளார் இயக்குநரும் நடிகரமான சீமான்.நடிகர் விஜய் ஏன் சூப்பர் ஸ்டார் என காரணம் கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும்  இயக்குநரும் நடிகருமான சீமான்.

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். ஆக்ஷன், நடனம்,நகைச்சுவை, ரொமான்ஸ், செண்டிமெண்ட் என சினிமாவில் கலக்கி வருகிறார் .

தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார் விஜய். இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக  ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அத்துடன் சரத்குமார், பிரகாஷ் ராஜ், சுமன், குஷ்பு, ஷாம், யோகி பாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 


வாரிசு திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வரும் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதிகாலை 6 மணிக்கு ஸ்பெஷல் ஷோவுடன் வாரிசு திரைப்படம் திரையிடப்பட உள்ளது. வாரிசு படத்துடன் துணிவு திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் வாரிசு படங்களின் புரமோஷனின் போதே விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு எழுந்தது. வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு விஜய்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார் என்றார். அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. எப்போதுமே நடிகர் ரஜினிகாந்துதான் ஒரே சூப்பர் ஸ்டார் என ரஜினி ரசிகர்கள் தில் ராஜுவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதேபோல் பத்திரிகையாளரான பிஸ்மியும் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஜினி ரசிகர்கள் பிஸ்மியின் அலுவலத்திற்கு சென்று வாக்குவாதம் செய்ததாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர், இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், சூப்பர் ஸ்டார் என்ற இடம் யாருக்கும் நிரந்தரமானது அல்ல என ரஜினி ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். தற்போதைய தலைமுறையினர் அதிகம் விரும்பும் நடிகராக விஜய்தான் உள்ளார் என விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அவருக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என மீண்டும் பேசியுள்ளார் சீமான். சென்னை சத்யா மெட்ரிகுலேசன் பள்ளியில் கீரா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் எம்ஜிஆர், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள இரும்பன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சீமான், எம்ஜிஆர் சினிமாவுக்கு வந்தது எப்படி? அவர் பட்ட கஷ்டங்கள் என்னென்ன என்பது குறித்து புகழ்ந்து பேசினார்.


 தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விஜய் இருக்கின்றார் என்றால் அதற்கு காரணம் அவருடைய கடின உழைப்புதான்.  விஜய் போன்று நடனமாடுவதற்கு இந்தியாவிலேயே நடிகர் கிடையாது என புகழாரம் சூட்டியுள்ளார் சீமான்.இவர் கிடைக்கும்இடத்தில் எல்லாம் சீமான் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement