• Apr 16 2024

ரஜினி என்னிடம் ஆசையாக கேட்டது என்றால் இது மட்டும் தான்- நெகிழ்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து

stella / 1 year ago

Advertisement

Listen News!

அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், இந்த படத்தையும் இயக்கி வருகிறார். 

சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


ரஜினிகாந்த் இந்த போஸ்டரை பார்த்த பலரும் பேட்ட பட ஸ்டைலில் இருப்பதாக கூறி வந்தனர். ரஜினியின் 169 படமான இந்த படத்தில் கே எஸ் ரவிக்குமார் கதை, வசனம் எழுதுவதாக கூறப்படுகிறது. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய ஆர் நிர்மல் படத்தொகுப்பு செய்கிறார். படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க ரஜினி குறித்த ஒரு சுவாரஸியமான விடயத்தை கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். அதாவது ரஜினி நடிபப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் அண்ணாமலை. இப்படத்தில் இடம் பெறும் கொண்டையில் தாழம்பு என்னும் பாடலை வைரமுத்து ரஜினியிடம் பாடிக் காட்டியுள்ளார்.


அப்போது அதில் குஷ்புவின் பெயர் வந்தவுடன் உண்மையாகவே குஷ்புவின் பெயர் வருதா என்று கேட்டாராம். அதனைத் தொடர்ந்து என் பெயர் வராதா என்று கேட்டாராம். அதனால தான் அப்பாடலில் பின்னுக்கு வரும் ராஜா நீ ரஜினி வரிகள் அவருக்காக வைக்கப்பட்டதாம்.

மேலும் ரஜினி என்னிடம் வாய் திறந்த கேட்டது என்றால் இது ஒரு விடயம் தான் என பிரபல பேட்டி ஒன்றில் வைரமுத்து நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement