• Apr 20 2024

இது பைத்தியக்காரத் தனம்- சகுந்தலம் படத்தில் சோகமான புகைப்படத்தை பகிர்ந்து சமந்தா போட்ட முக்கிய பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா நடிப்பில் யசோதா என்னும் திரைப்படம் வெளியாகியதைத் தொடர்ந்து தற்பொழுது அவர் நடித்து வரும் திரைப்படம் தான் சகுந்தலம். பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.

சகுந்தலம் திரைப்படத்தை இயக்குநர் குணசேகர் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க, சேகர்  V ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார்.


Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா,இப்படத்தை தயாரிக்கிறார்.  இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் அறிமுகமாக உள்ளார்.இந்த படம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா, சகுந்தலம் படத்திற்கு டப்பிங் பணிகளை மேற்கொண்டு வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


சகுந்தலை கதாபாத்திரத்தின் சோகமான ஸ்டில்லை பகிர்ந்த சமந்தா, "பைத்தியக்காரத்தனம், துக்கம் மற்றும் உலகத்தில் இழந்த அனைத்துக்கும்  மருந்து கலை, அதன் மூலம் நான் குணமடைந்து வீட்டிற்குச் செல்வேன்.- நிக்கி ரோவ்" என பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement