• Apr 23 2024

யார் கண்ணிலும் படாமல்.... முகமூடி அணிந்து சுற்றும் பிரபல நடிகையின் கணவர்... என்ன கொடுமைடா இது...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷில்பா ஷெட்டி. இவரின் கணவர் தான் ராஜ் குந்த்ரா. இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் இருந்து வந்தார். 


ஆபாசப் படங்களைத் தயாரித்து அதை மொபைல் ஆப்களில் வெளியிட்டதாகக் கூறி ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை காவல்துறையினர் கடந்த வருடம் கைது செய்துள்ளனர்.

45 வயதான ராஜ் குந்த்ரா இந்த குற்றத்தில் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், அதற்கான அனைத்து ஆதாரங்களும் காவல்துறையிடம் இருப்பதாகவும் மும்பை காவல்துறை ஆணையர் தெரிவித்திருந்தனர்.


இவரின் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்தரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆபாச படம் எடுத்த வழக்கில் ராஜ்குந்த்ரா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 


தற்போது சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்த அவர் யாருடைய கண்களிலும் படக்கூடாது என்பதற்காக முகமூடி அணிந்து கொண்டு சுற்றி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் வெளியுலகில் யார் கண்ணிலும் படாமல் இருந்து வருகிறார். 


இருப்பினும் அவர் முகமூடி அணிந்து வெளியிடங்களில் நடமாடி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement