• Apr 25 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தான்- வெளியாகிய அதிகாரப்பூர்வ தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி 54 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.அதன்படி இந்த வாரம் அசீம் கேப்டனாக மாறியதால் கதிரவன், குயின்ஸி, மைனா நந்தினி, ரச்சிதா, தனலட்சுமி, ஜனனி உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வாரம் நாமினேஷனுக்கு வந்திருக்கும் 6 பேரும் வெளியேறுவதற்கு அனைத்து விதத்திலும் அத்தனை பொருத்தங்களும் அம்சமாக கொண்ட நபர்கள் தான் எனலாம்.மேலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷ்ன் நடைபெறும் என்று கூறப்பட்டது.ஆனால் தற்பொழுது ஒரு போட்டியாளர் மட்டும் வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது.


அதன்படி அதிக ஓட்டுக்களை பெற்று கதிரவன் முதல் நபராக சேவ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இவரைத் தொடர்ந்து ஜனனி சேவ் ஆனார்.இவர்களின் பின்னர் ரச்சிதா தான் சேவ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த வாரம் புடிக்கலைன்னா வெளியே அனுப்பிடுங்க என ஆடியன்ஸிடமே மைனா நந்தினி திமிராக பேசிய நிலையில், ஆரம்பத்தில் இருந்து குறைவான ஓட்டுக்களுடன் இருந்த மைனா நந்தினி அசீம் - அமுதவாணன் பிரச்சனையில் தலையிட்டு தைரியமாக பேசி கேம் விளையாடிய நிலையில், இந்த வாரம் அவர் தப்பித்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


ஷிவினிடம் அம்மாவை பற்றி பேசி கேமுக்காக அழ வைத்த தனலட்சுமி, அசீமை அவுட்டாக்க முட்டையெல்லாம் அடித்தார். அதனால் கடுப்பான ரசிகர்கள் ஹெட்செட் போட்டு பிக் பாஸ் பார்க்க முடியவில்லையே என தனலட்சுமியை அனுப்பி விடும் நோக்கத்தில் அவருக்கு ஓட்டே போடாத நிலையில் டேஞ்சர் ஜோனில் தனலட்சுமி உள்ளார். வேடிக்கை பார்த்துக் கொண்டே தூங்கி வழியும் குயின்சியும்  இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் கடைசி இடத்தில் உள்ளார். அதன்படி இந்த வாரம் குயின்சி தான் வெளியேறுவார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement