• Apr 23 2024

பல ட்விஸ்ட்களுக்கு பிறகு எலிமினேசன் ஆன போட்டியாளர் இவர் தான்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. முந்தைய ஐந்து சீசன்களை தொகுத்து வந்த நடிகர் கமல்ஹாசன் தான் இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.முதல் நாளில் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்த நிலையில், முதல் வார முடிவில் மைனா நந்தினி வைல்ட் கார்ட் என்றியாக  பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்திருந்தார்.

ஆரம்பத்தில் கலகலப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இருந்த நிலையில், அடுத்தடுத்து நடந்த டாஸ்க்குகளால் சூடு பிடிக்க தொடங்கி இருந்தது. எனினும் இதனிடையே, முதல் இரண்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளராக வலம் வந்த ஜிபி முத்து, தனது மகன் மற்றும் குடும்பத்தினரை நினைத்து உருக்கமடைந்து வெளியேறுவதாகவும் அறிவித்து கிளம்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது வார இறுதியில் சாந்தியும் எலிமினேட் செய்யப்பட்டிருந்தார்.


அத்தோடு 19 போட்டியாளர்களுடன் மூன்றாவது வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி காலடி எடுத்து வைத்திருந்தது. அந்த வாரத்தில் நடைபெற்ற பொம்மை டாஸ்க் காரணமாக நிறைய கலவரங்கள் பிக்பாஸ் வீட்டில் நடந்திருந்தது. ஷெரினா கீழே விழுந்தது, சக போட்டியாளர்களுடன் அசீம் சண்டை போட்டது உள்ளிட்ட பல பரபரப்பு சம்பவங்கள் உள்ளே நடந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், ஒரு வார பிரச்சனைகள் அனைத்திற்கும் குறும்படங்கள் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் விடை சொல்லி இருந்தார். அத்தோடு பல போட்டியாளர்களின் தவறுகளை கமல் சுட்டிக் காட்டி இருந்த விஷயமும் பார்வையாளர்கள் கவனத்தை அதிகம் கவர்ந்தது.

இவ்வாறுஇருக்கையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன இரண்டாவது போட்டியாளர் யார் என்பதை கமல்ஹாசன் கூறியுள்ளார். அசீம், மகாலக்ஷ்மி மற்றும் அசல் கோலார் ஆகியோர், நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். இதில் பேசும் மகேஸ்வரி, "என்னை பொறுத்தவரைக்கும் எனக்கு ஒரு Confident இருக்கு" என்கிறார். தொடர்ந்து, "நான் தான் தப்பு பண்ணி இருக்கேன். அப்டிங்குற பட்சத்துல அது எதுனாலும் மக்கள் தீர்ப்பை நான் ஏத்துக்குறேன்" என அசீம் கூறுகிறார்.

எனினும் இதன் பின்னர் பேசும் அசல் கோலார், "நான் என்ன பண்ணிட்டேன்னு என்ன இந்த இடத்துல உட்கார வெச்சு இருக்காங்கன்னு முழிச்சிட்டு இருக்குறேன்" என்கிறார்.அத்தோடு  இறுதியில், அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டது உறுதியானது.


பிரபல இளம் இசை கலைஞரான அசல் கோலார், 'Jorthaale' என்ற பாடல் மூலம் அதிகம் பிரபலமாகி இருந்தார். எனினும் இதனைத் தொடர்ந்து, பல பாடல்கள் பாடியுள்ள அவர், பிக்பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்தார்.

ஆரம்பத்தில் ஆயிஷாவுடன் சிறிய சண்டையுடன் அசல் கோலார் ஆரம்பித்திருந்தாலும் அதன் பின்னர் சக போட்டியாளர்களுடன் ஜாலியாக தான் வலம் வந்து கொண்டிருந்தார். அப்படி ஒரு  சூழலில், மூன்றாவது வார இறுதியில் எலிமினேட் செய்யப்பட்டு அவர் வெளியேறவும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement