• Apr 19 2024

விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியனுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர்.. அது இதனால் தானாம் வந்தது..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரிற்கு விஜய பிரபாகர் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகன் விஜய பிரபாகர் தேமுதிக கட்சி பொறுப்புகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் மட்டும் தான் சினிமா நடிகராக இருக்கிறார். 


அந்தவகையில் சண்முக பாண்டியன் கடந்த 2015-ஆம் ஆண்டு 'சகாப்தம்' என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் 'தமிழன் என்று சொல்' என்ற படத்தில் ஒப்பந்தமானார். அதுமட்டுமல்லாது தற்சமயம் 'மித்ரன்' என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். 


இந்நிலையில் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ள சண்முக பாண்டியன் பல சுவாரசியமான தகவல்களை அந்த சமயத்தில் கூறியிருக்கிறார்.

மேலும் விஜயகாந்தினுடைய நெருங்கிய நண்பர் ராவுத்தர் என்பது நம்மில் பலருக்குமே தெரியும். அதாவது விஜயகாந்த் சினிமாவில் நடிகராக உயர்வதற்கு முக்கிய பலமாக இருந்தவர் ராவுத்தர்தான். 

அது மட்டுமின்றி நிறைய இஸ்லாமிய நண்பர்களும் மாதா வேறுபாடின்றி விஜயகாந்திற்கு இருக்கிறார்கள். 'கேப்டன் பிரபாகரன்' என்ற படத்தில் நடித்தபோது விஜயகாந்திற்கு தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் மீது ஏற்பட்ட அமோக மரியாதையால் தனது முதல் மகனுக்கு விஜய பிரபாகர் என்று பெயர் வைத்தார். 


அதேபோன்று தனது நண்பர்கள் நிறைய பேர் இஸ்லாமியர்கள் என்பதால் இரண்டாவது மகனுக்கு சௌக்கத் அலி என்ற பெயர் வைக்க வேண்டும் என்ற திடீர் முடிவு எடுத்திருந்தாராம் நம்ம விஜயகாந்த்.

இதனை அறிந்த பலரும் "இஸ்லாமிய பெயர் வைப்பதினால் தவறில்லை, ஆனால் பாஸ்போர்ட்டில் இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு இந்து மதம் என்று குறிப்பிட்டால் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அவருக்கு பிரச்சனை வரும்" என்று கூறினார்களாம். 

இதனைக் கேட்டதும் விஜயகாந்த் " அப்படியென்றால் வெளிநாட்டிற்கே அவன் செல்ல வேண்டாம் இங்கேயே இருக்கட்டும், எனக்கு சாதி, மதம் கிடையாது அதனால் ஒரு முஸ்லிம் பெயரையோ கிறிஸ்தவ பெயரையோ வைப்பதில் என்ன சிக்கல்" என்று விஜயகாந்த் கேட்டாராம்.

இருப்பினும் நடைமுறையில் உள்ள சிக்கல்களை மறுபடியும் பலரும் எடுத்துக் கூறி அவர் மனதை மாற்றியிருக்கிறார்கள் என்று சண்முக பாண்டியன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் அடடே நம்ம விஜயகாந்த் இப்படிப்பட்ட ஒருவரா எனக்கேட்டு ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனராம்.

Advertisement

Advertisement

Advertisement