• Apr 19 2024

பெண்களை காட்டிலும் திரையுலகில் எங்களையும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வற்புறுத்தினாங்க-உண்மையை உடைத்த இயக்குநர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கிராமத்து மண்வாசனையை பாரதிராஜாவுக்கு அடுத்தபடியாக தனக்கான சிறந்த பாணியில் கொடுக்க நினைத்தவர் இயக்குநர் அமீர்.இவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது படத்தில் நடிகராக திரையுலகில் அறிமுகமானவர் தான் அமீர்.


அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து மெளனம் பேசியதே படத்தை இயக்கி இயக்குநர் ஆனார்.இவ்வாறு இருக்கையில் பருத்திவீரன் திரைப்படம் இயக்குநர் அமீருக்கு தமிழ் சினிமாவில் தனி அங்கீகாரத்தையும் முன்னணி இயக்குநர் என்கிற அடையாளத்தையும் வழங்கியது.

இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வடசென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் அமீர்.



இவ்வாறுஇருக்கையில்  இவரை பிரபல ஊடகம் ஒன்று சமீபத்தில் பேட்டி  எடுத்துள்ளது.அதில் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசினார். அதாவது நான் பார்த்த 100 பேரில் 20 பேரை மட்டும் தான் என்னால் தக்கவைத்துக் கொள்ளமுடிந்தது. காரணம் என்னுடன் ஒத்துப்போகாமை, என்னோட குணம் இதெல்லாம் சில பேருக்கு பிடிக்காமல் போனதால் தான் அவர்கள் என்னை விட்டு போய்விட்டார்கள் என்று சொன்னார்.



 அத்தோடு பிரபல தயாரிப்பாளர் ஒருவரை ஒரு இரவு நேரத்தில் என்னிடம் நீ கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி போ என்று கூறினார். உடனே நான் கேட்டேன். நடிகைகளிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பத்தி பேசுனா அது வேற. என்னிடம் எதை அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றீங்கனு கேட்டேன். அதன் பின்னர் தான் புரிந்தது நடிகர்களிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணி போக சொல்றாங்கனு.அவர்கள் சொல்றத கேட்க சொல்றாங்கனு. என்று  தெரிவித்தார் அமீர்.

Advertisement

Advertisement

Advertisement