• Apr 20 2024

திரையரங்கில் ஒருவர் கூட இல்லை மேடம் .. கூறிய முக்கிய பிரபலம்.. கடும் அப்செட்டில் நயன்தாரா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக கடந்த 17 ஆண்டுகளாகத் திகழ்ந்து வருபவர் நயன்தாரா. தமிழில் 'ஐயா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா தன் இரண்டாவது படத்திலேயே சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார்.


அத்தோடு ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைக்கின்றார் நயன்தாரா. இந்நிலையில் நயன்தாராவின் நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் சமீபத்தில் கனெக்ட் திரைப்படம் வெளியானது.

அதாவது ரவுடி பிக்சர்ஸ் சார்பாக இப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரித்திருந்தனர். சத்யராஜ், அனுபம் கேர் என மிகப்பெரிய முன்னணி நடிகர்கள் நடித்த இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. திகிலான படமாக வெளியான கனெக்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக கனெக்ட் ஆகவில்லை என்று தான் சொல்லவேண்டும்.


இருந்தாலும் இது நயன்தாராவின் சொந்தப் படம் என்ற காரணத்தால் விழுந்து விழுந்து ப்ரோமோஷன் செய்து வருகின்றார். அந்த வகையில் மதுரையில் உள்ள கோபுரம் திரையரங்கிற்கு பட ப்ரோமோஷனுக்காக நயன்தாரா சென்றிருந்தார்.

ஆனால் அந்த திரையரங்கின் உரிமையாளர் அன்புச்செழியன் நயன்தாராவை மதுரைக்கு வரவேண்டாம் என கூறிவிட்டாராம். ஏனெனில் படத்தை காண ரசிகர்களே இல்லை என்பதால் நயன்தாராவை வரவேண்டாம் என கூறிவிட்டாராம் அன்புச்செழியன். இதன் காரணமாக தற்போது கடும் அப்சட்டில் நயன்தாரா இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement